திருக்கோஷ்டியூர் தெப்ப உற்சவம் : விளக்கேற்றி பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மார் 2017 10:03
திருப்புத்துார்: சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் மாசித் தெப்ப உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டனர். சவுமியநாரயணப்பெருமாள் கோயில் மாசித் தெப்ப உற்சவம் மார்ச் 3 ல் துவங்கியது. நேற்று முன்தினம் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நடந்தது. நேற்று காலை 6:10 மணிக்கு தங்கப் பல்லக்கில் சர்வ அலங்காரத்தில் தேவியருடன் தெப்ப மண்டபத்தில் பெருமாள் எழுந்தருளினார். பெண்கள் குளக்கரையைச் சுற்றிலும் தீபம் ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். மதியம் 12:00 மணிக்கு பகல் தெப்ப உற்சவம் நடந்தது. பக்தர்கள் ஓம் நமோ நாராயணா கோஷத்துடன் தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவிலும் தெப்ப உற்சவம் நடந்தது. இன்று காலை தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரியும், இரவில் தங்கப்பல்லக்கில் பெருமாள் புறப்பாடும் நடக்கிறது.