Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருமலைக்குமாரசுவாமி கோயிலில் ... திண்டல் கோவில்களில் சூரசம்ஹார விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் சூரசம்ஹாரம் கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 நவ
2011
11:11

கழுகுமலை : கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில் கந்தசஷ்டி திருவிழா கோலாகலமாக நடந்தது. போர்க்கோலத்தில் காட்சியளித்த முருகன் சூரன்களை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சியில் ஆயிரக்கண க்கான பக்தர்கள் கலந்து கொ ண்டனர். முருகனின் திருவிழாக்களில் முக்கிய திருவிழாவான கந்தசஷ்டி விழா கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் கடந்த 26ந்தேதி துவங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரமும், அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில் திருவீதி உலாவும் நடந்தது. இதையடுத்து கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலுக்கென தனிச்சிறப்பு கொண்ட தாருகாசூரன் வதம் செய்யும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இந்நிலையில் ஆறாம் திருநாளான நேற்று (அக்.31) கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடந்தது. இதையொட்டி காலையில் நடைதிறப்பும், திருவனந்தள் பூஜையும் நடந்தது. இதையடுத்து கந்தசஷ்டி விரதம் மேற்கொண்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து கழுகுமலை மலைக்குன்றை சுற்றி வந்தனர். தொடர்ந்து சண்முகர் அர்ச்சனையும், சுவாமி பல்லக்கிலும், வள்ளி தெய்வானை பூஞ்சப்பரத்திலும் திருவீதி உலா வருதலும் நடந்தது. மதியத்திற்கு மேல் கழுகாசலமூர்த்தி சூரசம்ஹார போர்கோல அலங்காரத்துடன் வீரவேல் ஏந்தி வெள்ளி மயில் வாகனத்தின் மீதேறி குமார தெப்பமருகேயுள்ள ருத்திராட்ச மண்பத்தில் எழுந்தருளினார். தொ டர்ந்து மாலையில் போர்க்களத்தில் ஆணவம் கொண்ட சூரர்கள் ஆடும் ஆட்டத்துடன் சூரசம்ஹாரம் நடந்தது. இதில் சூரபத்மனின் மகன் பானுகோபன், மந்திரி தர்மகோபன், தாய் மாயை, தம்பி சிங்கமுகாசூரன் ஆகியோரை அழித்த பின்னர் இறுதியாக சூரபத்மனையும் முருகன் சம்ஹாரம் செய்தார். இதையடுத்து சூரபத்மன் மயிலாகவும், சேவலாகவும் மாறி முருகனிடம் தஞ்சமடைந்தார் என்பது வரலாறு. சூரசம்ஹாரத்தை தொடர்ந்து இரவில் சீர்வாங்கி அபிஷேகம் நடத்தப்பட்டு சுவாமி வெள்ளி அங்கியுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் கோவில்பட்டி ஆர்டிஓ பொன்னியின்செல்வன், கோயில் நிர்வாக அதிகாரி தமிழானந்தன், உழவாரப்பணிக்குழு தலைவர் முத்துசாமி மற்றும் குடும்பத்தினர், பவுர்ணமி கிரிவலக்குழு தலைவர் முருகன், சுப்புலட்சுமி மரக்கடை மாரியப்பன், கழுகுமலை சுற்றுலா வளர்ச்சிக் குழுவினர், 63 நாயன்மார் குருபூஜைக்குழு தலைவர் சீனிவாசன், துணை தலைவர் தேவகளை ஆனந்தன் உள்பட கழுகுமலை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் கார்த்திகை பிரம்மோற்சவ விழாவில் இன்று காலை கல்ப விருட்ச வாகனத்தில் தாயார் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா நாளை (நவ 21ம் தேதி) துவங்கி டிச 7ம் தேதி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு, மலை மற்றும் காடுகளில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண், கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar