பதிவு செய்த நாள்
16
மார்
2017
12:03
கன்னிவாடி: கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயிலில், காரடையான் நோன்பை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவர், ஓம்கார விநாயகர், நந்திக்கு, வேதி தீர்த்தாபிஷேகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரத்துடன், மகா தீபாராதனை நடந்தது. *கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், பால், பன்னீர், இளநீர், தயிர், தேன் உள்ளிட்ட திரவிய அபிஷேகம் நடந்தது. மூலவர், உற்சவருக்கு, சிறப்பு மலர் அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. அன்னதானம் நடந்தது. * சித்தையன்கோட்டை காசி விசுவநாதர் கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில், காரடையான் நோன்பை முன்னிட்டு விசேஷ அபிஷேகம் நடந்தது.