Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருத்தணி சுந்தர விநாயகர் கோவிலில் ... கன்னிவாடி மாரியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொன்னம்பல மேட்டில் கோயில் மத்திய அரசின் அனுமதி கிடைக்குமா தேவசம்போர்டு எதிர்பார்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மார்
2017
12:03

சபரிமலை, மகரவிளக்கு நாளில் மகர ஜோதி காட்சி தரும் பொன்னம்பல மேட்டில் தர்மசாஸ்தா கோயில் கட்டுவதற்கான நடவடிக்கையை திருவிதாங்கூர் தேவசம்போர்டு துரிதப்படுத்தியுள்ளது. இதற்காக மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மகரவிளக்கு நாளில் சபரிமலை சன்னிதானத்தின் எதிர்புறம் உள்ள பொன்னம்பலமேட்டில் மகர ஜோதி காட்சி தரும். ஜோதி தரிசனத்துக்காக ஏராளமான பக்தர்கள் சபரிமலையில் கூடுகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜோதி தினத்தில் புல்மேட்டில் நடைபெற்ற விபத்தில் 107 பக்தர்கள் இறந்தனர். இந்த சம்பவத்துக்கு பின்னர் மகர ஜோதி பற்றிய பல்வேறு விவாதங்களும் கிளம்பியது. இறுதியில் சபரிமலை மூத்த தந்திரி கண்டரரு மகேஸ்வரரு மகர ஜோதி ஏற்றப்படுவதுதான் என்றும், மகர நட்சத்திரம் தெரிவது இயற்கையானது என்றும் தெரிவித்தார். இதை தொடர்ந்து தற்போது பொன்னம்பலமேட்டில் தர்ம சாஸ்தா கோயில் கட்ட தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. இந்த பகுதி பெரியாறு புலிகள் சரணாலய பகுதிக்கு உட்பட பகுதியில் வருகிறது. எனவே கோயில் கட்டுவதற்காகவும், அங்கு செல்லும் பாதைக்காகவும் ஒரு ஏக்கர் வனபூமி கேட்டு தேவசம்போர்டு சார்பில் மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதுகுறித்து தேவசம்போர்டு தலைவர் கோபாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: பொன்னம்பல மேட்டில் கட்டப்படும் கோயிலில் தினமும் பூஜை, வழிபாடு நடத்துவற்கு நினைக்கவில்லை. மகரவிளக்கு நாளில் மட்டும் பூஜைகள் நடைபெறும். அன்று பம்பை கணபதி கோயில் மேல்சாந்தி அங்கு சென்று பூஜைகள் நடத்துவார். ஜோதி ஏற்றும் பொறுப்பும் பம்பை மேல்சாந்தியிடம் ஒப்படைக்கப்படும். சபரிமலை தந்திரியின் அனுமதியுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மகரவிளக்கு நாளில் மட்டும்தான் இங்கு செல்ல அனுமதி உண்டு. தேவசம்போர்டு நிர்வாகிகள் உட்பட எவரும் அங்கு செல்ல அனுமதி கிடையாது. வனபாதுகாப்பு சட்டத்தை கடுமையாக கடைபிடிப்போம் என்று தேவசம்போர்டு சார்பில் மத்திய அரசுக்கு உறுதி அளிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar