பழநி தேரடி வீதியில் அள்ளப்படாத குப்பையால் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மார் 2017 11:03
பழநி: பழநி தேரடி வீதியில் அள்ளப்படாமல் குவிந்துள்ள குப்பையால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர். பழநி கிழக்குரதவீதியிலுள்ள பெரியநாயகியம்மன், மாரியம்மன் கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வந்துசெல்கின்றனர். கோயிலுக்கு செல்லும் முக்கியவழியான தேரடிவீதி தெப்பக்குளம் அருகே குப்பை தினமும் அகற்றப்படாமல் தொட்டிகள் நிரம்பியுள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் அவ்வழியாக செல்லும் பக்தர்கள், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் மாசித்திருவிழாவின்போது பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய அக்னிசட்டிகள் தேரடி தெப்பக்குளத்தில் குவிந்துகிடக்கிறது. அவற்றை அப்புறப்படுத்த நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.