பரமக்குடியில் ஏப்.9 ல் பெருமாள் தாயார் பங்குனி திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மார் 2017 11:03
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திரத்தன்று திருக்கல்யாணம் நடப்பது வழக்கம். இதன் படி ஏப்.,8 ல் இரவு 8:30 மணிக்கு அனுக்ஞையுடன் விழா தொடங்குகிறது. ஏப்.,9 ல் காலை 8:00 மணிக்கு சுந்தரராஜப் பெருமாள் மாப்பிள்ளை கோலத்துடன் ஆடி வீதியில் வலம் வந்து கொடிமர மண்டபத்தில் பெருமாள், தாயார் நிச்சயதார்த்தம் நடக்கிறது. பின், காலை 9:00 மணிக்கு திருக்கல்யாண மண்டபத்தில் சுந்தரராஜப் பெருமாளுக்கும், சவுந்தரவல்லித்தாயாருக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.தொடர்ந்து இரண்டு நாட்கள் காலை, மாலை ஊஞ்சல் சேவை, ஏப். 12ல் மாற்றுத்திருக்கோலமும், ஏப். 13 காலை அபிஷேகம், இரவு 7:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் பெருமாள் பூப்பல்லக்கில் வீதிவலம் வருவார். ஏற்பாடுகளை தேவஸ்தா டிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.