பதிவு செய்த நாள்
22
மார்
2017
12:03
திருவள்ளூர்: விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில், மூல மந்திர ஹோமம் நடைபெற்றது. திருவள்ளூர், பெரியகுப்பம், தேவி மீனாட்சி நகரில், 32 அடி உயர விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.இக்கோவிலில், மூல நட்சத்திரத்தை முன்னிட்டு, நேற்று, காலை 9:00 மணிக்கு, மூல மந்திர ஹோமம் நடந்தது. பின், பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சார்த்தி, வெற்றிலை மாலை அணிவிக்கப்பட்டது. மதியம் 12:00 மணியளவில், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருமஞ்சனம் : திருவள்ளூர், சத்தியமூர்த்தி தெருவில் உள்ள, பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலில், மணவாள மாமுனிவருக்கு, திருமஞ்சனம் நேற்று, மாலை, 5:30 மணியளவில் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.