பதிவு செய்த நாள்
25
மார்
2017
01:03
பேரம்பாக்கம்: பேரம்பாக்கம் சோளீஸ்வரர் கோவிலில், வரும், 31ம் தேதி, பங்குனி உத்திர பிரம்மோற்சவம் திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்குகிறது. கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கத்தில் அமைந்துள்ளது காமாட்சியம்மன் உடனுறை சோளீஸ்வரர் கோவில். இந்த கோவிலில், இந்த ஆண்டு பங்குனி உத்திர பிரம்மோற்சவம், வரும் 31ம் தேதி, காலை, 9:00 மணி முதல், 10:30 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அதன் பின், பஞ்சமூர்த்தி அலங்காரமும், மாலையில் சோமாஸ்கந்தர் சந்திரபிரபை வீதியுலாவும் நடைபெறும். முன்னதாக, 30ம் தேதி, காலை, 9:30 மணிக்கு, விக்னேஸ்வர பூஜையும், கணபதி ஹோமமும் நடைபெறும். மாலையில், வாஸ்து சாந்தி யும், அங்குரார்பணமும், விநாயகர் திருவீதி உலாவும் நடைபெறும். தொடர்ந்து, 10 நாட்கள் பங்குனி உத்திர பிரம்மோற்சவ திருவிழா நடைபெறவுள்ளது. மேலும், காலை, 9:00 மணி மற்றும் மாலை, 6:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் சுவாமி உலா மற்றும் வீதியுலாவும் நடைபெறும்.
சுவாமி வீதியுலா குறித்த நிகழ்ச்சி நிரல்
நாள் காலை மாலை
ஏப்., 1 கேடய உற்சவ உலா பூத வாகன சேவை வீதியுலா
ஏப்., 2 கேடய உற்சவ உலா அதிகார நந்தி சேவை வீதியுலா
ஏப்., 3 கேடய உற்சவ உலா நாகன வாகன சேவை வீதியுலா
ஏப்., 4 அதிகார நந்தி வீதியுலா பஞ்சமூர்த்தி விசேஷ
உற்சவ வீதியுலா
ஏப்., 5 கேடய உற்சவ உலா யானை வாகனம் வீதியுலா
ஏப்., 6 புஷ்ப உற்சவ வீதியுலா கேடய உற்சவ வீதியுலா
ஏப்., 7 சூரிய பிரபை வீதியுலா திருக்கல்யாணம், குதிரை
வாகன வீதியுலா
ஏப்., 8 கேடய உற்சவ உலா புஷ்ப பல்லக்கு வீதியுலா,
நடராஜர் உற்சவம்
ஏப்., 9 வள்ளுவன் காட்சி, கைலாச பர்வதம், கொடியிறக்கம்
வெள்ளை சாற்றுபடி
ஏப்., 10 கலசா அபிஷேகம் ரிஷப வாகன வீதியுலா, ஊடல் உற்சவம்