சிவனின் அம்சமான தட்சிணாமூர்த்தி சின்முத்திரை காட்டி அமர்ந்திருப்பார். சுண்டு விரல், மோதிர விரல். நடுவிரல் மடங்கியிருக்கும்.சுட்டுவிரல், பெருவிரலுடன் இணைந்திருக்கும். இதில் சுண்டு விரல் மனிதனுக்கு இருக்கும் ஆணவத்தைக் குறிக்கும். மோதிரவிரல், மனிதன் தனது செயல்களால் அடையும் பாவ புண்ணியம் என்னும் இருவகை பலன்களான கன்மம் என்ற குணத்தைக் குறிக்கும். நடுவிரல் மாயை என்னும் உலக வாழ்வு நிலைய ற்றது என்ற தன்மையைக் குறிக்கும். சுட்டுவிரல் மனிதனைக் குறிக்கும். பெருவிரல் கடவுளைக் குறிக்கும். ஆணவம், கன்மம், மாயையை விட்டு விட்டால், மனிதன் கடவுளை அடைந்து விடுவான் என்பது இந்த முத்திரையின் தத்துவம். கன்மம் என்னும் குணத்திலுள்ள புண்ணியத்தை எப்படி விடுவது என்ற சந்தேகம் தோன்றும். பாவமோ, புண்ணியமோ அதையும் கடவுளிடம் அர்ப்பணித்து விட வேண்டும். அந்தளவுக்கு மனம் பக்குவப் பட்டால் தான் பிறவியில் இருந்து தப்பலாம்.