பதிவு செய்த நாள்
27
மார்
2017
10:03
திருத்தணி: கோட்ட ஆறுமுக சுவாமி கோவிலில், நேற்று நடந்த முதல் நாள் சூர்ய பூஜையில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.திருத்தணி முருகன் கோவிலின் துணை கோவிலான ஸ்ரீ கோட்ட ஆறுமுக சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி மாதம் 13, 14 மற்றும் 15ம் தேதிகளில், மூன்று நாட்கள் சூர்ய பூஜை நடக்கிறது. அந்த வகையில், நேற்று முதல் நாள் பூஜை நடந்தது.அலங்காரம்இதையொட்டி, காலை, 6:05 மணிக்கு சூரியனின் ஒளி கதிர்கள், மூலவர் முருகப்பெருமானின் திருப்பாதம் மீது விழுந்தது. அப்போது, மூலவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
ஏற்பாடு: இன்று காலை, இரண்டாம் நாளில் சூர்ய ஒளி கதிர்கள் மூலவரின் திருமேனி மீதும், நாளை, சிரசின் மீதும் விழும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.