சிலர் சொல்கிறார்கள்; கடவுள் கண்ணுக்குத் தெரியவில்லையே? அவர் இருக்கிறாரா? என்று. இது சரியாகுமா? பம்பரம் தானே சுழலுமோ? அல்லது சுழற்றினால் சுழலுமா? தாயுமானவர் கூறுகிறார்.
பம்பரத்தை சாட்டை வைத்து சுழற்றுகிறான் சிறுவன், சாட்டையில்லாமலே உயிர்க் குலத்தை ஆட்டுவிக்கிறான் இறைவன். நாம் சாட்டையை வைத்து பம்பரத்தைச் சுழற்றுகிறோம். ஆண்டவன் தானே சுழற்றுகிறான். ஆக, ஆட்டுவிப்பவன் இன்றி, ஒன்றும் ஆடாது என்பது தெளிவு. உலகுக்கு முதல் காரணமாக இருப்பது மாயை. துணைக் காரணமாக இருப்பது சக்தி. நிமித்த காரணமாய் இருப்பது சிவம். பானை செய்வதற்கு முதல் காரணம் மண். அடுத்த காரணம் குயவனார். துணைக் காரணம் தண்டச் சக்கரம். பானை செய்யும்போது பார்க்கலாம். சக்தி என்ற துணைக் காரணத்தைக் கொண்டு, நிமித்த காரணமாய் இருக்கின்ற சிவபெருமான் இந்த உடலாகிய பானையை வனைகின்றான் என்பது சாஸ்திரம். ஆக, பானையைப் பார்த்தவுடன் குயவன் ஞாபகம் வருவதைப் போல நம்முடைய உடலைப் பார்க்கும் போதெல்லாம் இறைவன் ஞாபகம் ஒவ்வொருவருக்கும் வர வேண்டும்.