பதிவு செய்த நாள்
28
மார்
2017
04:03
ஜபம் என்பது பகவானுடைய நாமாவையோ பீஜாட்சரங்களையோ அங்கன்யாசம், கரன்யாசம் வழியாகச் செய்வது. உடம்பில் ஒவ்வொரு அங்கங்களை மந்திரங்கள் சொல்லி, கையினால் தொட்டுக் கொள்வதற்கு அங்கன்யாசம் என்று பெயர். கை விரல்களில் தொட்டுக் கொள்வதற்கு கரன்யாசம் என்று பெயர்.
இதனுடன் தியான சுலோகமும் சேர்த்து, ஓர் இடத்தில் அமர்ந்து, கண்களை மூடிக்கொண்டு செய்வதற்கு ஜபம் என்று பெயர். அப்படி இன்றி, ரிஷி சந்தஸ் முதலியவை இல்லாதபடிக்கு, பகவானின் குணங்களையும் மகிமைகளையும், இடையே பகவானின் நாமாக்களையும் சேர்த்து வரக்கூடிய பாகங்களை மகரிஷிகள் பாகவதம், ராமாயணம், மகாபாரதம் முதலிய நூல்களில் எழுதி வைத்திருக்கிறார்கள். அந்த பாகங்களை மட்டும் எடுத்து, நாம் நமக்குத் தேவையானவை நிறைவேறுவதற்காக படிப்பதற்கு பாராயணம் என்று பெயர். உதாரணமாக, ஆதித்ய ஹ்ருதயம், விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்ரம், பகவத் கீதை முதலியவை பாராயணத்தில் சேரும், பகவானின் மந்திரத்தை குரு முகமாக உபதேசம் பெற்றுதான் செய்ய வேண்டும். ஆனால், பாராயணத்துக்கு அந்தக் கட்டுப்பாடு கிடையாது. அதேநேரம் ஜபம் என்பது குறிப்பிட்ட காலங்களில் கண்களை மூடிக் கொண்டு நியமத்துடன் செய்வது. ஆனால், பாராயணத்துக்கு அந்தக் கட்டுப்பாடு கிடையாது.