பதிவு செய்த நாள்
30
மார்
2017
12:03
ஓசூர்: ஓசூர் சந்திரசூடேஸ்வரர், மரகதாம்பாள் கோவில் தேர்த்திருவிழா முடிந்து, பத்து நாட்கள் கடந்த நிலையில், இரு தேர்களுக்கும் ஷெட் அமைக்கும் பணி துவங்கியுள்ளது. +ஓசூர் தேர்ப்பேட்டை மலை மீது, 1,000ம் ஆண்டுகள் பழமையான சந்திரசூடேஸ்வரர், மரகதாம்பாள் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில் தேர்த்திருவிழா, ஆண்டுதோறும் மார்ச் மாதம் வெகுவிமர்சையாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா, கடந்த, 5 ல் துவங்கி, 19 வரை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, 12 காலை நடந்த தேரோட்டத்தில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழா முடிந்து, பத்து நாட்கள் கடந்த நிலையில், இரு தேர்களும் தேர்ப்பேட்டை கல்யாண சூடேஸ்வரர் கோவில் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மழை, வெயிலுக்கு தேர் சேதமாகி விடாமல் இருக்க அமைக்கப்பட்டிருந்த ?ஷட், தேர்த்திருவிழாவின் போது அகற்றப்பட்டது. திருவிழா முடிந்து விட்டதால், மீண்டும், இரு தேர்களுக்கும் ஷெட் அமைக்கும் பணி துவங்கி நடந்து வருகிறது.