பதிவு செய்த நாள்
30
மார்
2017
12:03
பவானி: பவானி அருகே, பத்ரகாளியம்மன் கோவில் பங்குனி விழா விமரிசையாக நடந்தது. பவானி தேவபுரம் பத்ரகாளியம்மன் பங்குனி விழா கடந்த, 14ல், பூச்சாட்டுதலுடன் துவங்கியது. பின், 21ல் கோவில் முன் கம்பம் நடப்பட்டு, கொடியேற்று விழா நடந்தது. அப்பகுதி பெண்கள் கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி வழிபட்டனர். நேற்று கூடுதுறையில் தீர்த்தம் எடுத்து வந்து, பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து, மஹா தீபாராதனை நடந்தது. இரவு, 7:00 மணியளவில் அக்னிச்சட்டி ஊர்வலம் நடந்தது. இன்று கம்பம் பிடுங்குதல், மஞ்சள் நீராட்டம், அம்மன் திருவீதி உலா நடக்கிறது. நாளை விளக்கு பூஜை, ஏப்., 2ல் மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.