திருப்புவனம்: திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர், சவுந்தரநாயகி அம்மன் கோயில் பங்குனி தேரோட்டம் ஏப்., 8 ல் நடக்கிறது. இக்கோயில் திருஞான சம்பந்தர், அப்பர், சமய குரவர்களால் பாடப்பெற்ற திருத்தலம். புஷ்பவன காசி என அழைக்கப்படும் இத்திருத்தலத்தில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடக்கும். இந்தாண்டு திருவிழா நாளை காலை 9:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தினமும் பல்வேறு மண்டகப்படியில் சுவாமி, அம்மன் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கும். ஏப்., 7 காலை 10:00 மணிக்கு திருக்கல்யாணம், ஏப்., 8 காலை 8:45 மணிக்கு தேரோட்டம் நடக்கின்றன. விழா ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் செந்தில்குமார், பட்டர்கள் செந்தில், கண்ணன் செய்து வருகின்றனர்.