Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி மலைக்கோயிலில் வருடாபிஷேகம்: ... பெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் பெரியாண்டிக்குழி பாலமுருகன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாழாகும் கோவில் கோபுரங்கள்: அறநிலையத்துறை கவனிக்குமா?
எழுத்தின் அளவு:
பாழாகும் கோவில் கோபுரங்கள்: அறநிலையத்துறை கவனிக்குமா?

பதிவு செய்த நாள்

01 ஏப்
2017
06:04

விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் கோபுரங்களில் செடிகள் முளைத்து, சிற்பங்கள் சிதைவதை தடுக்க அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில், 1,500 ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலில் ஆண்டுதோறும் திருவிழாக்களும்; பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, கிருத்திகை உள்ளிட்ட மாதாந்திர விசேஷங்களும் சிறப்பாக நடக்கும். தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநில, மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் தினசரி வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.

இங்கு பூஜைக்கு பயன்படும் தளவாட பொருட்கள், வளாகம் துாய்மை செய்வது போன்ற உழவாரப் பணிகளை அவ்வப்போது சிவத்தொண்டர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.  இக்கோவில் ஐந்து கோபுரங்கள், ஐந்து கொடி மரங்கள் என ஐந்தின் சிறப்புகளை கொண்டது. ஆனால், கோவில் கோபுரங்கள் பராமரிப்பின்றி சிற்பங்கள் சிதிலமடைந்து வருகின்றன. கோபுரம் முழுவதும் செடிகள் முளைத்து, அதிலுள்ள சிற்பங்கள் பெயர்ந்து கீழே விழுந்து உடைந்து வீணாகிறது. பக்தர்கள் புகாரின் பேரில், கோவில் நிர்வாகம் சார்பில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் மேற்குப் பகுதி கோபுரத்தில் முளைத்திருந்த செடிகளை அழித்து, வர்ணம் அடிக்கப்பட்டது. ஆனால், கோபுரத்தில் மீண்டும் செடிகள் முளைத்து, கலையிழந்து காட்சியளிக்கிறது. எனவே, விருத்தகிரீஸ்வரர் கோவில் கோபுரங்களில் வளர்ந்துள்ள செடிகளை அழித்து, புதுப்பிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பூர்: சிவன்மலை சுப்ரமணிய‌சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் கந்த சஷ்டி விரதம் துவங்கியது. ஏராளமான ... மேலும்
 
temple news
கோவை; கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் அருள் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் ஐப்பசி மாதம் முதல் வெள்ளி ... மேலும்
 
temple news
திருத்தணி: முருகன் கோவிலில் நடந்து வரும் கந்தசஷ்டி விழா ஒட்டி, வரும் 26ம் தேதி வரை தினமும், இரண்டு மணி ... மேலும்
 
temple news
ஹாசன்: பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவில், 14 நாட்களுக்குப் பின், நேற்று நடை அடைக்கப்பட்டது. இந்தாண்டு, 25 ... மேலும்
 
temple news
கீழக்கரை: கீழக்கரை அருகே மாயாகுளம் ஊராட்சி மங்களேஸ்வரி நகரில் புதிதாக திருப்பணிகள் செய்யப்பட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar