ஹேவிளம்பி ஆண்டுக்குரிய வெண்பா இது தான். ஹேவிளம்பி மாரி அற்பம் எங்கும் விலைகுறைவாம் பூமி விளைவது அரிதாம் போர் மிகுதி சாவதிகம் ஆகுமே வேந்தர் அநியாயமே புரிவர் வேகுமே மேதினி தீ மேல் இவ்வாண்டு மழை, விளைச்சல் குறையும். போரால் மக்கள் மடிவர்.
தீ விபத்துக்கள் ஏற்படும். விலைவாசி குறையும் என்பது இதன் பொருள். இந்த வெண்பாவிலுள்ள பலன்கள் நடக்க வாய்ப்பு குறைவு என பஞ்சாங்கங்கள் சொல்கின்றன. ஏனெனில் சித்திரை மாதம் வெள்ளியன்று பிறப்பதால் பெருமழை கொட்டும் என பலன் உள்ளது. மொத்த மழையில் 10 பங்கு கடலிலும், 6 பங்கு காடு, மலைகளிலும், 4 பங்கு பூமியிலும் பெய்யும். இவ்வாண்டின் மேகாதிபதி குரு என்பதால் விளைச்சலும் நன்றாக இருக்கும். தை மாதம் ஞாயிறன்று பிறப்பதும் நல்ல மழைக்கான அறிகுறியே. சென்னை, கடலுார், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் நல்ல மழை இருக்கும்.