Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மந்திரகிரி வேலாயுதசுவாமி கோவிலில் ... திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக நேரம் அறிவிப்பு திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2025
10:06

மறைமலை நகர்; பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவிலில், வைகாசி மாத தேரோட்டம் விமரிசையாக நடந்தது. சிங்கபெருமாள் கோவில் –- அனுமந்தபுரம் சாலையில், அகோபிலவல்லி தாயார் சமேத பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரம்மோத்சவம் விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான பிரம்மோத்சவத்திற்கு, கடந்த 31ம் தேதி கொடி ஏற்றப்பட்டது. கடந்த ஆறு நாட்களாக சூர்ய பிரபை, சந்திர பிரபை, யாளி வாகனம், யானை வாகனத்தில் உற்சவர் பிரகலாத வரதர் நான்கு மாட வீதிகளில் வலம் வந்தார். முக்கிய நிகழ்வான தேரோட்டம், நேற்று விமரிசையாக நடந்தது.அதிகாலை உற்சவர் பிரகலாதவரதர், ஸ்ரீதேவி, பூதேவியருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. காலை 6:30 மணிக்கு, சுவாமி தேரில் எழுந்தருளினார். 7:00 மணிக்கு தேரின் வடம் பிடித்து, பக்தர்கள் இழுத்துச் சென்றனர். அப்போது கூடியிருந்த பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்பி, பக்தி பரவசமடைந்தனர். மங்கல வாத்தியங்கள் முழங்க, வாணவேடிக்கையுடன் நான்கு மாட வீதிகளில் வலம் வந்த தேர், காலை 11:30 மணிக்கு நிலையை வந்தடைந்தது. இந்த தேரோட்டத்தில், சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். இதில் கூடுவாஞ்சேரி சரக உதவி ஆணையர் தலைமையில், நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேலூர்; திருவாதவூரில் வைகாசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருமறைநாதருக்கு வேதநாயகி அம்பாள் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், வைகாசி மாத சுக்ல பட்ச ஏகாதசி வைபவம் நடந்தது.கோவை ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில், 400 கோடி ரூபாய் மதிப்பில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான மலை மேலுள்ள காசி ... மேலும்
 
temple news
 மதுராந்தகம்; மதுராந்தகத்தில், 1,000 ஆண்டுகள் பழமையான மீனாட்சி அம்மன் சமேத திருவெண்காட்டீஸ்வரர் கோவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar