Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இதிகாசங்கள், புராணங்கள் மக்களால் ... பெரியபட்டணம் தர்காவில் சந்தனக்கூடு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலைக்கு கேரள அரசின் 600 பஸ்கள் இயக்கப்படும்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

04 நவ
2011
10:11

திருவனந்தபுரம் : இவ்வாண்டு சபரிமலை சீசன் போது, கேரள மாநில அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இயக்கப்பட, 600 பஸ்கள் தயாராக உள்ளன. இவைகள், மாநிலத்தின் பல்வேறு பணிமனைகளில் இருந்து ம்பை, நிலக்கல் பகுதிகளுக்கு இயக்கப்பட உள்ளன. கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலை அய்யப்பன் கோவிலில், இவ்வாண்டுக்கான மண்டல õல உற்சவம், வரும் 16ம் தேதி துவங்க உள்ளது. இதில் கலந்து கொள்ள தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உட்பட, நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் திரள்வது வழக்கம். இவ்வாண்டுக்கான உற்சவங்களை ஒட்டி, கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பம்பைக்குச் செல்ல பக்தர்களின் வசதிக்காக, கேரள மாநில அரசு போக்குவரத்துக் கழக பஸ்கள் இயக்கப்பட உள்ளன. சில வாரங்கள் முன்னர் வரை, இதற்காக, 500 புதிய பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது மூன்றாண்டுகள் இயக்கப்பட்ட, 600 பஸ்களை இதற்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வருமானத்தை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு இவ்வாறு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்காக பல்வேறு பணிமனைகளில் பழுது நீக்குவதற்காக நிறுத்தப்பட்டுள்ள பஸ்களும் அடக்கம். அய்யப்ப பக்தர்களில், 40 பேர் கொண்ட குழுவுக்கு பஸ் தேவைப்படின், அவர்களுக்காக சிறப்பு சர்வீஸ் நடத்தவும் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. மாநிலத்தில் திருவனந்தபுரம் சென்ட்ரல், கொட்டாரக்கரா, கோட்டயம், எர்ணாகுளம், பாலக்காடு, திருச்சூர், கோழிக்கோடு, மூணாறு, மலப்புரம், சுல்தான்பத்தேரி, காசர்கோடு, குருவாயூர், வளாஞ்சேரி, மைசூரு, பெங்களூரு, கோவை, பம்பை ஆகிய இடங்களில் பக்தர்களுக்கு ஆன்-லைன் முன்பதிவு வசதி செய்யப்பட்டுள்ளது. தமிழக எல்லைப் பகுதியான தேனி மாவட்டம் குமளி மற்றும் கேரள மாநில கோழிக்கானம், உப்புத்தரா, புல்மேடு பகுதிகளில் இருந்து, எருமேலி, பம்பை ஆகிய இடங்க ளுக்கு தொடர் சர்வீஸ் நடத்தப்படும். இதற்காக, 300 பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் தற்போது சர்வீஸ் நடத்தி வரும் பஸ்களை சபரிமலை சிறப்பு பஸ்களாக இயக்கப்படும் போது அப்பகுதிகளில் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில், ந.வைரவன்பட்டி வளரொளிநாதர் கோயில்களில் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தில் இன்று மோகினி ... மேலும்
 
temple news
திருப்பதி;  ஜனாதிபதி திரௌபதி முர்மு திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி இன்று தரிசனம் ... மேலும்
 
temple news
டில்லி; டில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ ... மேலும்
 
temple news
கோவை;  கார்த்திகை மாதம் அனுஷம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் கே. எஸ். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar