Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கண்டாச்சிபுரத்தில் தீமிதி திருவிழா பாலசுப்ரமணியர் கோவிலில் நாளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கந்தசாமி கோவிலில் நாளை பங்குனி உத்திர விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஏப்
2017
02:04

காளிப்பட்டி: சேலம், காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், நாளை பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது. பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, இன்று மாலை ஆற்றில் காவடிகளை புனித நீர் ஊற்றி சுத்தம் செய்து, சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். பங்குனி உத்திரத்தன்று அதிகாலை, 5:00 மணிக்கு மூலவர் கந்தசாமிக்கு புனித தீர்த்தங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பூஜைகள் செய்யப்படும். விழாவையொட்டி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து, காவடிகளை சுமந்து வந்து வேண்டுதலை நிறைவேற்றுவர். இரவு, 8:00 மணிக்கு சப்பரத்தில், கந்தசாமி எழுந்தருளி கோவில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்கின்றனர். இதேபோல், பூலாவரியில் உள்ள கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பங்குனி உத்திர திருவிழா நாளை நடக்கிறது. அன்று காலை, 10:00 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத கல்யாண சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை செய்யப்படும். மாலை, 5:00 மணிக்கு வள்ளி தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

* வீராணம் பிரதான சாலை, டி.பெருமாபாளையம், கோம்பேரிக்காடு, சிவசக்தி முருகன் கோவிலுக்கு, இன்று காலை, 6:30 மணியளவில், சேலம், சுகவனேஸ்வரர் கோவிலில் இருந்து, தீர்த்தகுடம் மற்றும் காவடி எடுத்து, நடைபயணமாக வருகின்றனர். இரவு, 7:00 மணிக்கு பஜனை நடக்கும். நாளை மதியம், 12:00 மணிக்கு, முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

* சேலம், சுக்கம்பட்டியில் உள்ள உதயேஸ்வரர் கோவிலில், 11ம் ஆண்டு திருவிழா, வரும், 12ல் நடக்கிறது. அன்று காலை, 8:00 முதல், மதியம், 12:00 மணிக்குள், யாக பூஜை, அபிஷேகம்; மாலை, 5:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கிறது.

* பெத்தநாயக்கன்பாளையம் அருகே, மேட்டுடையாம்பாளையம் விநாயக முருகன் கோவிலில், ஆறாம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நாளை நடக்கிறது. காலை, 7:00 மணிக்கு காவடி நிறைகட்டுதல், பால்குட ஊர்வலம்; 10:00 மணிக்கு, சுவாமிக்கு அபிஷேக ஆராதனை; மாலை, 5:00 மணிக்கு சுவாமி திருவீதி உலா; இரவு, 8:00 மணிக்கு, இன்னிசை பாட்டு கச்சேரி நடக்கிறது.

* மகுடஞ்சாவடி, சுப்ரமணியர் கோவிலில், நாளை காலை, 10:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம்; 11:00 மணிக்கு வெள்ளிக் கவசம், புஷ்ப அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடக்கிறது.

* இடைப்பாடி, சித்தூர் படவெட்டியம்மன் கோவில், பங்குனி திருவிழா, கடந்த, 5ல், பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று மாலை, தேர் திருவிழா நடந்தது. கோவிலில் இருந்து, சித்தூர் அம்மன் கோவில் வரை, பக்தர்கள் தேரை இழுத்து வந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
 கடலுார்: இலங்கையை சேர்ந்த தமிழர்கள், 96 பேர் இந்தியாவில் முழுவதும் உள்ள ஆன்மீக வழிபாட்டுத் தலங்களை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், சோழர் கால விஷ்ணு கற்சிலையை, வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar