Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அனந்த ரங்கநாத பெருமாள் கோவிலில் மகா ... பரமக்குடியில் பங்குனி திருவிழா: பெருமாள் - தாயார் திருக்கல்யாணம் பரமக்குடியில் பங்குனி திருவிழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருதுநகர் மாரியம்மன் கோயில் பொங்கல் விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஏப்
2017
02:04

விருதுநகர்: விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனிப் பொங்கல் விழாவில், ஏராளமான பக்தர்கள் அழகு குத்தி அக்னி சட்டி ஏந்தி பராசக்தி மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Default Image

Next News

விருதுநகர் , சிவகாசி, திருத்தங்கல், அருப்புக்கோட்டை, செங்குன்றாபுரம், இருக்கன்குடி ஆகிய பகுதிகளில் உள்ள மாரியம்மன், காளியம்மன், முத்தாலம்மன் ஆகிய கோயில்களில் பங்குனி பொங்கலையொட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த வந்து கொண்டே இருப்பார்கள். பெண்கள் கூட்டம் அதிகம் இருக்கும். இரவு முழுவதும் கோயிலுக்கு பக்தர்களின் வருகை இருந்து கொண்டே இருக்கும். இக்கோயில் பங்குனிப் பொங்கல் விழா ஏப்.2 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடந்தன. முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா நேற்று நடந்தது. கோயிலுக்கு முன் காலை முதலே ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். இதன் தொடர்ச்சியாக இரவு அடுப்பு பூஜை நடந்தது. அதை தொடர்ந்து பராசக்தி அம்மன் தங்ககுதிரை வாகனத்தில் வீதியுலா வந்தார். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள் விரதம் இருப்பர். நேர்த்திக் கடன் செலுத்துவதற்கு முன் நாட்டுக்கோழி குழம்பு, கருவாட்டுக் குழம்பு , கொழுக்கட்டை என செய்து மண்சட்டியில் சமைத்து அம்மனுக்கு படைத்தனர். அதன்பின் ஏராளமான பக்தர்கள் கயிறு குத்து, அக்னி சட்டி ஏந்துதல், கரகம் எடுத்தல், ரதம் இழுத்தல், வேடங்கள் போட்டு நேர்த்திக்கடனை செலுத்தினர். பொங்கல் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரயாக்ராஜ்; "பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் இன்று 1.28 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்களும், நேற்று வரை 59.31 ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம் ஜென்மபூமி மந்திரில் ராமரின் தெய்வீக தரிசனத்திற்காக இன்று ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி முருகனை தரிசிக்க, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் பல ஆயிரம் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில்  வருடாந்திர மகாசிவராத்திரி ... மேலும்
 
temple news
விருத்தாசலம்; விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் மாசிமக பிரம்மோற்சவம் வெகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar