புஷ்ப அலங்காரம்: உடுமலை மாரியம்மன் கோவிலில் தேர்த்திருவிழா வரும், 13ம் தேதி நடைபெறவுள்ளதையொட்டி கடந்த, 4ம் தேதியில் இருந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. அதில் இன்று புஷ்ப அலங்காரத்தில் அம்மன் காட்சியளிப்பதுடன், அன்ன வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இரவு, 10:00 மணிக்கு குட்டை திடலில் குருவாயூர் கிருஷ்ணன், பச்சைக்காளி, பவளக்காளி மற்றும் கோவை சரண் மெலோடீஸ் இணைந்து வழங்கும் இன்னிசை விழாவும் நடைபெறுகிறது.