பதிவு செய்த நாள்
10
ஏப்
2017
04:04
திருத்தணி: திரவுபதியம்மன் கோவிலில், நேற்று நடந்த தீமிதி திருவிழாவில்,5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி தீ மிதித்தனர். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
செய்தனர்.திருத்தணி, காந்தி நகரில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், கடந்த மாதம், 23ம் தேதி கொடியேற்றத்துடன் தீமிதி திருவிழா துவங்கியது. தினமும், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், உற்சவர் அம்மன் ஊர்வலம், மதியம் மகாபாரத சொற்பொழிவு மற்றும் இரவுநாடகம் ஆகியவை நடந்து வந்தது.நேற்று, காலை, 9:30 மணிக்கு துரியோதனன் படுகளம் நடந்தது. தொடர்ந்து, நூற்றுக்கணக்கான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல்
வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். தொடர்ந்து, மாலை, 6:00 மணிக்கு உற்சவர் திரவுபதியம்மன் சிறப்பு அலங்காரத்தில், முக்கிய வீதிகள் வழியாக பூ கரகத்துடன் ஊர்வலமாக அக்னி குண்டம் அருகே வந்து எழுந்தருளினார். பின், 5,000க்கும்
மேற்பட்டோர் காப்பு கட்டி விரதம்இருந்த பக்தர்கள் குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர். அப்போது, அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என, பக்தி
முழக்கமிட்டனர். தொடர்ந்து, வாணவேடிக்கை மற்றும் இரவு, 8:00 மணிக்கு உற்சவர் அம்மன் வீதியுலாவும் நடந்தது. இன்று, காலை, 11:00 மணிக்கு, தருமர் பட்டாபிஷேகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர்கள் மற்றும் காந்திநகர் வாசிகள் செய்திருந்தனர்.