Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிள்ளையார்பட்டியில் தீர்த்தவாரி தமிழ் புத்தாண்டு விழா: சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடு தமிழ் புத்தாண்டு விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேலக்கிடாரத்தில் கவனிப்பாரில்லாத 800 ஆண்டு பழமையான திரிசூல கல்
எழுத்தின் அளவு:
மேலக்கிடாரத்தில் கவனிப்பாரில்லாத 800 ஆண்டு பழமையான திரிசூல கல்

பதிவு செய்த நாள்

15 ஏப்
2017
12:04

சிக்கல்: சிக்கலில் மேலக்கிடாரத்தில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் நிலத்தை குறிக்கும் எல்லைக்கல்லை தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்த வேண்டும், வரலாற்று ஆய்வாளர்கள் விரும்புகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகே மேலக்கிடாரத்தில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவகாமி அம்மன் சமேத திருவனந்தீஸ்வரமுடையார் கோயில் உள்ளது. கோயிலுக்கு அருகே 2 கி.மீ., தொலைவில் குறிச்சிக்குளம் உள்ளது. இங்குள்ள விவசாய நிலத்தில் திரிசூலக் கல், சீமைக்கருவேல மரங்களாலும், புதர்செடிகளாலும் மறைந்த நிலையில் உள்ளது. மூன்று அடி மட்டுமே வெளியே தெரிகிறது. அதில் உடுக்கையுடன் கூடிய திரிசூலமும் வலது புறத்தில் சூரியனும், இடது புறத்தில் சந்திர பிறையும் செதுக்கப்பட்டுள்ளது. மேலக்கிடாரம், வரலாற்று ஆர்வலர் டி.செந்தில்குமார் கூறியதாவது: கி.பி., 1,236ல் மாறவர்மன் திரிபுவன சக்கரவர்த்தி சுந்தரபாண்டியனால் ,சிவன் கோயில் கட்டப்பட்டுள்ளது. கோயிலுக்குரிய நிலத்தினை குறிக்கும் வகையில் எல்லைக்கல்லாக, திரிசூலக்கல் நடப்பட்டுள்ளது. கோயில் நிலத்தை தேவதானம், என அழைத்தனர் . 1905ல் பிரிட்டிஷ் அரசின் கோயில்கள் வரலாற்று ஆவண புத்தகத்தில், இக்கோயில் இடம்பெற்றுள்ளது. மிகப்பழமையான திரிசூலக்கல்லை தொல்லியல்துறையினர் ஆய்வு செய்தால், மேலும் பல தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளது, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாரூர் : ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குருபெயர்ச்சி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டம் தென்குடித்திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில், (பரிகார ஸ்தலம்),  குரு ... மேலும்
 
temple news
சோழவந்தான், சோழவந்தான் அருகே குருவித்துறை குருபகவான் கோயிலில் இன்று மாலை குரு பெயர்ச்சி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருக்கோஷ்டியூர், திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில்  குரு பெயர்ச்சியை ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூரில், பேரூர் பட்டி நாயகர் சைவ நெறி அறக்கட்டளை சார்பில், 450 கிலோ பூக்கள் கொண்டு, மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar