Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேலக்கிடாரத்தில் கவனிப்பாரில்லாத 800 ... தமிழ் புத்தாண்டு பிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தமிழ் புத்தாண்டு விழா: சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடு
எழுத்தின் அளவு:
தமிழ் புத்தாண்டு விழா: சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடு

பதிவு செய்த நாள்

15 ஏப்
2017
12:04

நாமக்கல்: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாமக்கல்லில் உள்ள வழிபாட்டுத்தலங்களில் நேற்று அதிகாலையில் இருந்தே சிறப்பு வழிபாடு நடந்தது.

துர்முகி ஆண்டு நேற்று முன்தினம் முடிவுற்று நேற்று ஹேவிளம்பி தமிழ் ஆண்டு துவங்கியது நேற்று அதிகாலையில் இருந்தே நாமக்கல் நகரில் உள்ள வழிபாட்டுத்தலங்களான ஆஞ்சநேயர், நரசிம்மர், அரங்கநாதர் கோவில், கடைவீதி சக்தி விநாயகர், மோகனூர் சாலை பாலதண்டாயுதபாணி கோவில், பலபட்டறை மாரியம்மன்கோவில், ஏகாம்பரேஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் பக்தர்களின் கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது. நாமக்கல் ஆஞ்சநேயரை, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதிகாலை கோவில் நடை திறந்ததும் சுவாமிக்கு வடை மாலை சாற்றப்பட்டது. பின், சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, 108 கிலோ எடை கொண்ட வண்ண மலர்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, வெள்ளி கவசம் சாற்றப்பட்டு பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.

மல்லசமுத்திரம் அடுத்த, காளிப்பட்டியில் வீரபக்த ஆஞ்சநேயர் கோவிலில் காலை, 9:00 மணிக்கு சுவாமிக்கு பல்வேறு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடந்தது. சுவாமிக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு காட்சியளித்தார். வையப்பமலை பாலசுப்ரமணியசுவாமி கோவிலிலும், சுவாமிக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். குமாரபாளையம், அம்மன் நகர் ஐயப்பன் கோவிலில் அதிகாலை, 4:30 மணிக்கு சிறப்பு கனி தரிசனம் நடந்தது. ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. கோவில் வளாகம் முழுவதும் கனிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. காளியம்மன் கோவிலிலும் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார். அதேபோல், பள்ளிபாளையம், நாமகிரிப்பேட்டை. ப.வேலூர், திருச்செங்கோடு, ராசிபுரம் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள கோவில்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.

*நாமக்கல் - மோகனூர் சாலை, சுவாமி நகர், மூன்றாவது தெருவில் லக்ஷ்மி குபேர ஷீரடி சாய்பாபா கோவிலில், காலை, 7:30 மணிக்கு ஆரத்தி மற்றும் கணபதி பூஜை நடந்தது. 9:00 மணிக்கு பாபா திருவுருவச்சிலைக்கு பால் அபிஷேகம் நடந்தது. சுவாமிக்கு பல்வேறு பழங்களால் சிறப்பு அலங்காரம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி, ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாதம்  நான்காம் சனிக்கிழமை என்பதால்  இலவச தரிசனத்திற்கு 20 ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; புரட்டாசி மாதம்  கடைசி சனிக்கிழமையை ஒட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளை தரிசனம் செய்ய ... மேலும்
 
temple news
மகாபலிபுரம்; ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசங்கரவிஜயேந்திரசரஸ்வதிசுவாமிகள், அக்., 3ல் ... மேலும்
 
temple news
மதுரை: தமிழக முக்கிய கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு, ஆன்லைன் முன்பதிவு செய்யும் நடைமுறையை ஏற்படுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் பெரியானை கணபதிக்கு சங்கடஹர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar