Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வரதராஜப்பெருமாள் கோவில் ... உத்தமியம்மன் கோயிலில் 13ம் தேதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இளம் பெண் துறவரம்: நெல்லை டவுன் ஜெயின் கோயிலில் கவுரவிப்பு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 நவ
2011
11:11

திருநெல்வேலி : துறவரம் மேற்கொள்ளும் ஜெயின் சமுதாயத்தை சேர்ந்த இளம் பெண்ணிற்கு நெல்லை டவுனில் கவுரவிப்பு மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. ராஜஸ்தான் மாநிலம் ஜாலோன் மாவட்டம் உமேதாபார் கிராமத்தை சேர்ந்த ஜெயந்திலால், மணிதேவி தம்பதியரின் மகள் அம்ருதா என்ற ஹேமலதா (25). இவர் படித்துமுடித்துவிட்டு, பிரம்மச்சரியத்திலேயே பெற்றோர் சம்மதத்துடன் துறவியாக மாற விருப்பம் தெரிவித்தார். வரும் நவ.30ம் தேதி பெங்களூரில் ஸ்ரீ ராஜ எஸ்.சுரிஸ்வர்ஜி முன்னிலையில் துறவரம் எடுத்துக் கொள்கிறார். துறவியாக மாறும் இளம்பெண் அம்ருதாவிற்கு ஜெயின் சமுதாயத்தின் சார்பில் வரவேற்பு மற்றும் கவுரவிப்பு நிகழ்ச்சிகள் நடந்துவருகிறது. நெல்லை டவுனுக்கு வந்த அம்ருதாவை ஜெயின் சமுதாய மக்கள் பாட்டுப்பாடி சிறப்பான வரவேற்பு அளித்தனர். டவுன் அம்மன் சன்னதியில் இருந்து கீழரதவீதியில் உள்ள ஜெயின் கோயிலுக்கு அம்ருதாவை ஜெயின் சமுதாய மக்கள் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். ஜெயின் கோயிலில் ஜெயின் சமுதாய பெரியவர்களால் அம்ருதா கவுரவிக்கப்பட்டார். தொடர்ந்து அங்கு கூடியிருந்த மக்களிடையே அம்ருதா பேசுகையில், "உலகத்தில் எதுவும் நிரந்தரமானது இல்லை. தர்ம வழிகளில் அனைவரும் ஈடுபடவேண்டும். மோட்சத்தை அடையவேண்டும் என்றால் அதற்கான வழி துறவரம் தான். வாழ்க்கையில் எதுவே நிலையானது இல்லை என்பதால் மோட்சம் அடைய ஒரே வழி துறவரம் என்பதை முடிவு செய்து, அதை மேற்கொள்கிறேன். அனைத்து மக்களும் நல்வழிகளில் தர்ம சிந்தனையுடன் செயல்படவேண்டும். ஜெயின் சமுதாய மக்கள் துறவரம் நிலையை அடைய முயற்சிக்கவேண்டும் என்றார். நிகழ்ச்சியில் ஜெயின் சமுதாயத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஸ்ரீ சுபார்ஷநாத் ஜெயின் சங்கத்தினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில்,  திருவூடல் உற்சவ நிறைவு விழாவை யொட்டி,  உண்ணாமுலையம்மன் சமேத ... மேலும்
 
temple news
பொங்கல் பண்டிகையானது மொத்தம் நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. பொங்கலிற்கு முதல்நாள் போகி பண்டிகை, ... மேலும்
 
temple news
பல்லடம்; பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அய்யன் கோவிலில் குவிந்த பக்தர்கள், நீண்ட வரிசையில், ரோட்டில் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: கோவை ஈஷா யோகா மையத்தில், ஆதியோகி முன்பு, பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் மாட்டுப்பொங்கல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar