அழகர்கோவில்: வரலாற்று சிறப்புமிக்க அழகர்கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி மே10ம் தேதி பக்தர்களின் ‘கோவிந்தா ’ கோஷம் முழங்க நடக்கிறது. அழகர் கோவில் சுந்தரராஜபெருமாள் கோயிலில் நடக்கும் முக்கிய விழாவான சித்திரை திருவிழா மே6ம் தேதி துவங்குகிறது. முதல் 2 நாட்களும் பல்லக்கில் புறப்படும் சுந்தரராஜ பெருமாள் கோயிலை வலம் வருகிறார். மே 8ம் தேதி மாலை 6:00 மணிக்கு கள்ளழகர் திருக்கோலத்தில், தங்கப்பல்லக்கில் மதுரைக்கு புறப்படுகிறார். 18ம் கருப்பணசாமியிடம் அனுமதி பெற்று இரவு 7:00 ம ணிக்கு கோயிலில் இருந்தும துரைக்கு புறப்படுகிறார். மே 9ம் தேதி காலை 6:00 மணிக்கு மூன்றுமாவடி, புதுார், அவுட்போஸ்டில் எதிர்சேவை நடக்கிறது.
ஆற்றில் இறங்குகிறார்: மே10ம் தேதி தங்க குதிரை வாகனத்தில் காலை 6:15 மணிக்கு பக்தர்களின் ‘கோவிந்தா ’ கோஷம் முழங்க வைகை ஆற்றில் இறங்குகிறார். காலை 10:00 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு வண்டியூர் வீரராகவபெருமாள் கோயிலை சென்றடைகிறார். மே 11 காலை சேஷ வாகனத்தில் புறப்படும் அவர், மதியம் 12:00மணிக்கு கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்கிறார்.
பூப்பல்லக்கு: அன்று இரவு 8:00 ம ணிக்கு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நடக்கிறது. மே 12 காலை மோகன அவதாரத்திலும், அனந்தராயர் மண்டபத்தில் ராஜாங்க சேவையிலும் அருள்பாலிக்கிறார். மே 13 இரவு 2.30 மணிக்கு மன்னர் சேதுபதி மண்டபத்தில் பூப்பல்லக்கும் நடக்கிறது. அங்கிருந்து மலைக்கு புறப்படும் அவர் மே 14ம் தேதி அழகர் மலையை அடைகிறார். முன்னதாக திருவிழாவின் முதல் நிகழ்ச்சியாக ஏப்.,26 காலை 9:30 மணிக்கு தல்லாகுளம் பெருமாள் கோயிலிலும், பகலில் வண்டியூரிலும் கொட்டகை முகூர்த்தம் நடக்கிறது.