Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகாபாரத திருவிழாவில் துரியோதனன் ... பழவேற்காடு மாதா ஆலயத்தில் இன்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாதாள காளீஸ்வரருக்கு வரும் 30ல் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஏப்
2017
12:04

கொட்டையூர் : கொட்டையூரில் உள்ள சவுபாக்ய காமாட்சி அம்பாள் சமேத பாதாள காளீஸ்வரர் கோவிலில், வரும் 30ம் தேதி, மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கடம்பத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட கொட்டையூர் கிராமத்தில் உள்ளது, சவுபாக்ய காமாட்சி அம்பாள் சமேத பாதாள காளீஸ்வரர் கோவில். இங்கு, வரும் 30ம் தேதி, மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. முன்னதாக, வரும் 28ம் தேதி, காலை 9:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா துவங்குகிறது. தொடர்ந்து, நவக்கிரக ஹோமம், புதிய சிலைகளுக்கு கண் திறத்தல் முதலியன நடைபெறும். பின். மாலை 5:00 மணிக்கு. பிரவேசபலி, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், கும்பலங்காரமும், முதற்கால யாகசாலை பூஜையும் நடைபெறும். மறுநாள், 29ம் தேதி, காலை 8:30 மணிக்கு, இரண்டாம் கால யாகசாலை பூஜையும், தொடர்ந்து காலை, 10:30 மணிக்கு, புதிய சிலைகள், கோபுர கலசங்கள் பிரதிஷ்டையும், பரிவார மூர்த்திகளுக்கு அஷ்ட பந்தனமும் நடைபெறும்.

பின், மாலை 4:30 மணிக்கு, சுவாமி அம்பாள் அஷ்டபந்தனம் சாத்துதலும், தொடர்ந்து, 5:30 மணிக்கு, விசேஷசந்தியும், யாக சாலை பிரவேசம் மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடைபெறும். தொடர்ந்து கும்பாபிஷேக நாளான, வரும் 30ம் தேதி, காலை 7:00 மணிக்கு, நான்காம் கால யாகசாலை பூஜையும், காலை, 8:30 மணிக்கு, மகா பூர்ணாஹூதியும், யாத்ராதான சங்கல்பமும், காலை 9:00 மணிக்கு, பிரதான கலசம் ஆலய வலம் வருதலும் நடைபெறும். பின், காலை, 9:30 மணிக்கு, அனைத்து விமானங்களுக்கும் மகா கும்பாபிஷேகமும், காலை, 9:45 மணிக்கு, கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், வள்ளி தெய்வானை முருகர், நவக்கிரகம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். அதன் பின், காலை 10:00 மணிக்கு, சவுபாக்ய காமாட்சி அம்பாள் சமேத பாதாள காளீஸ்வரருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறும். மாலை, 6:00 மணிக்கு திருக்கல்யாணமும், அதை தொடர்ந்து வீதிஉலாவும் நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுடில்லியில், விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமி, கடந்த, 14ம் ... மேலும்
 
temple news
 பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் இன்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறையில் நாளை நடைபெற உள்ள கடை முக தீர்த்தவாரி பாதுகாப்புக்கு 280 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், ஓதுவார் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டம், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar