Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாதாள காளீஸ்வரருக்கு வரும் 30ல் ... மழை வேண்டி அக்னி வசந்த விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழவேற்காடு மாதா ஆலயத்தில் இன்று கொடியேற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஏப்
2017
12:04

பழவேற்காடு : பழவேற்காடு புனித மகிமை மாதா ஆலயத்தில், 502ம் ஆண்டு, திருத்தேர் பவனி வருதல்திருவிழாவை முன்னிட்டு, ஒன்றிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, முன் ஏற்பாடுகளை செய்தனர். பழவேற்காடு, நடுவூர் மாதா குப்பம் மீனவ கிராமத்தில், 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த, புனித மகிமை மாதா திருத்தலம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், புனித வெள்ளி முடிந்து, இரண்டாவது சனிக்கிழமை, திருத்தேர் பவனி வருதல், திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். ஆலயத்தில், 502ம் ஆண்டு திருத்தேர் பவனி வருதல் திருவிழா, இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து, 10 தினங்கள் நடைபெறும். இந்த திருவிழாவின் போது, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும், பக்தர்கள் வருகை தருவர்.

அவர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை செய்து தருவதற்காக, மீஞ்சூர் ஒன்றிய அதிகாரிகள் நேற்று, அங்கு ஆய்வு பணிகள் மேற்கொண்டனர். ஒன்றிய ஆணையர் கார்த்திகேயன், வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன் மற்றும் ஒன்றிய அதிகாரிகள் அங்கு பார்வையிட்டு, ஆங்காங்கே தேங்கி கிடந்த குப்பை கழிவுகளை ஜே.சி.பி., இயந்திரங்கள் மூலம் அகற்றினர். மேலும், திருவிழாவிற்கு வருகை புரிபவர்களுக்கு முக்கிய இடங்களில் பிளாஸ்டிக் தொட்டிகள் மூலம் குடிநீர் வினியோகிப்பது, தேங்கும் குப்பையை உடனுக்குடன் அகற்றுவது, கார்களை நிறுத்துவதற்கு இடம் தேர்வு செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர். மேற்கண்ட பணிகளுக்காக கூடுதல் பணியாளர்களை நியமித்து, திருவிழாவிற்கு வருகை புரிபவர்களுக்கு உதவிட ஆட்சியர் உத்தரவின்பேரிலும், திட்ட இயக்குனர் அறிவுறுத்தலின்பேரிலும், ஒன்றிய நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 10:45 – 11:45 மணி.இப்போதெல்லாம் சூழ்நிலைகளின் காரணமாக, வீட்டுக்குள் காஸ் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: மார்கழி கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவம் காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நடந்தது.  ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு கோவை, உக்கடம் பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் பெரிய கோவில் வளாக தரையில், மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்,ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar