மேலூர்: மேலூர் அருகே பழைய சுக்காம்பட்டியில் வீரகாளியம்மன் கோவில் உள்ளது. இக் கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். திருவிழாவை முன்னிட்டு காப்பு கட்டிய பக்தர்கள் நேற்று வீட்டு வாசலில் தண்ணீர் வைத்து அதில் மஞ்சள் மற்றும் வேப்பிலையை வைத்து மழை வேண்டி சாமி கும்பிட்டனர். அதனைத் தொடர்ந்து சாமி கும்பிட்ட பக்தர்கள் தண்ணீரை கோவிலுக்கு கொண்டு சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். அதனால் மழை பெய்வதோடு, அனைத்து வளங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.