Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெரியகுளத்தில் நாமத்வார் ... கத்திரி வெயிலை முன்னிட்டு அருணாசலேஸ்வரருக்கு தாராபிஷேகம் கத்திரி வெயிலை முன்னிட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவன்மலை உத்தரவு பெட்டியில் உலக உருண்டை! போர் மூளூமா?
எழுத்தின் அளவு:
சிவன்மலை உத்தரவு பெட்டியில் உலக உருண்டை!  போர் மூளூமா?

பதிவு செய்த நாள்

03 மே
2017
05:05

காங்கேயம்: சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில், உலக உருண்டை வைக்க உத்தரவாகியுள்ளது. இதனால், உலகப்போர் மூளூம் என, பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்துள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டி பிரசித்தி பெற்றது. நாட்டில் நடக்க இருக்கும் இன்ப, துன்ப நிகழ்வுகளை முன்னதாகவே உணர்த்துவதால், இங்கு எழுந்தருளியிருக்கும் முருகனுக்கு காரணமூர்த்தி என்று பெயர். சிவன்மலை ஆண்டவர் பக்தர்களின் கனவில் வந்து குறிப்பிடும் பொருட்களை உத்தரவுப் பெட்டியில் வைப்பது தொன்று தொட்டு நடந்து வருகிறது. இதுவரை இங்கு மண், துப்பாக்கி, ஏர் கலப்பை, ரூபாய் நோட்டு, சைக்கிள், அரிசி, மஞ்சள், இளநீர், தங்கம், சர்க்கரை, பூமாலை, இரும்புச் சங்கிலி, ருத்ராட்சம் என, பல்வேறு பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் வலம்புரிச் சங்கு வைக்கப்பட்டது.   

இந்நிலையில், சென்னை, பம்மல், சங்கு நகரைச் சேர்ந்த நீலகண்ட மகரிஷி என்பவர் கனவில், உலக உருண்டை வைக்கும்படி உத்தரவானது. இதையடுத்து, ஆண்டவன் உத்தரவுப் பெட்டியில், உலக உருண்டை வைக்கப்பட்டது. முன்பு, துப்பாக்கி வைத்தபோது, கார்கில் போரில் இந்தியா வென்றது. தற்போது வடகொரிய மற்றும் அமொரிக்கா இடையே மோதல் போக்கு இருந்து வரும் நிலையில், உத்தரவுப் பெட்டியில் உலக உருண்டை வைக்கப்பட்டுள்ளதால், மூன்றாம் உலகப்போர் மூள்வதற்கான அறிகுறியா? என, பக்தர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, கோவில் சிவாச்சாரியார்  கூறியதாவது: உத்தரவுப் பெட்டியில், எந்தப் பொருள் வைக்கப்படுகிறதோ அந்தப் பொருள், சமுதாயத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். உலக உருண்டை வைக்கப்பட்டுள்ளதால் உலகம் முழுவதும் ஆன்மீகம், யோகா குறித்த விழிப்புணர்வு அதிகாரிக்கும். வெப்பம் அதிகரித்ததால் தீ விபத்துகள், மற்றொருபுரம் தண்ணீரினால் பாதிப்புகள் ஏற்படும். இதன் தாக்கம் போகப் போகத்தான் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நெல்லிக்குப்பம்: நடனபாதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை விரைந்து நடத்த கோரிக்கை ... மேலும்
 
temple news
நத்தம்: திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோயில் விநாயகர் சன்னதியில் சங்கடஹர சதுர்த்தி விழா ... மேலும்
 
temple news
கம்பம்: கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன்பட்டி கவுமாரியம்மன் கோயில் திருப்பணிகளை, எம்.பி. தங்க ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் 7 நாட்கள் நடக்கும் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; மயிலாடுதுறையில் நடந்த தருமபுரம் ஆதினத்தின் 60வது மணிவிழாவை முன்னிட்டு, ஈஷா காவேரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar