பதிவு செய்த நாள்
05
மே
2017
11:05
திருத்தணி: மழை பெய்ய வேண்டி நாகாலம்மன் கோவிலில், நேற்று, சிறப்பு யாகம் மற்றும் 108 குடம் மஞ்சள் நீர் அபிஷேகம் நடந்தது. திருத்தணி அடுத்த, தலையாறிதாங்கல் கிராமத்தில் உள்ள நாகாலம்மன் கோவிலில், நேற்று, மழை பெய்ய வேண்டி சிறப்பு யாகம் மற்றும், 108 குடம் மஞ்சள் நீர் ஊற்றி அபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி, கோவில் வளாகத்தில், யாகசாலையில், ஐந்து கலசங்கள் அமைத்து சிறப்பு யாகம் நடந்தது. தொடர்ந்து, காலை, 9:00 மணிக்கு, 108 பெண்கள் மஞ்சள் நீர் குடத்துடன் ஊர்வலமாக கோவில் வளாகத்திற்கு வந்தடைந்தனர். பின், மூலவர் அம்மனுக்கு மஞ்சள் நீர் ஊற்றி சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு மலர் அலங்காரம் மற்றும் மழை பெய்ய வேண்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலையில் பெண்கள் பொங்கல் வைத்தும், இரவு சிறப்பு பூஜைகளும் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.