சிங்கம்புணரி: பிரான்மலையில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது. இங்குள்ள கலியுக மெய் ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா மே 4 ம் தேதி தொடங்கியது. இதையொட்டி பாப்பாபட்டி திடலில் வைத்து 2 மண் புரவிகள் செய்யப்பட்டது. பின்னர் இவை அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மே 4 ம் தேதி பிரான்மலை வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. பக்தர்கள் புரவிக்கு வழிபாடு செய்தனர். புரவிகள் தேரடி பொட்டலில் இறக்கி வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. 2ம் நாளான நேற்று அங்கிருந்து புறப்பட்ட புரவிகள் ஊர் எல்லையில் உள்ள கோயிலுக்கு வந்தது. அங்கு கலியுக மெய் ஐயனாருக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடத்தப்பட்டது.