நெல்லிக்குப்பம் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மே 2017 01:05
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்தனர்.
நெல்லிக்குப்பம் கீழ்பட்டாம்பாக்கம் திரவுபதி அம்மன் கோவிலில் கடந்த மாதம் 28 ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது.கடந்த வியாழக்கிழமை அம்மன் திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது. நேற்று சிறப்பு அபிஷேகம் நடந்தது.அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள பூசாரி கணேஷ் பூங்கரகத்துடன் முதலில் தீமிதிக்க அவரை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் பக்தியுடன் தீமிதித்தனர்.