அழகர்கோயில் சித்திரை திருவிழா சுவாமி புறப்பாடுடன் துவங்கியது!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மே 2017 05:05
அழகர்கோவில்: அழகர்கோவில் சித்திரை திருவிழா துவங்கியது. அழகர் மலையில் இருந்து புறப்படும் கள்ளழகர் லட்சக்கணகான பக்தர்களின் ‘கோவிந்தா’ கோஷம் முழங்க மே 10ம் தேதி வைகை ஆற்றில் எழுந்தருளுகிறார்.
அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயில் விழாக்களில் கள்ளழகர் திருக்கோலத்தில் வைகை ஆற்றில் இறங்கும் சித்திரை திருவிழா வரலாற்றுச் சிறப்பு பெற்றது. இவ்விழாவை காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணகான பக்தர்கள் வைகை ஆற்றில் திரளுவர். சிறப்பு மிக்க இத்திருவிழா துவங்கியது. மே8ம் தேதி மாலை 5 மணிக்கு கண்டாங்கி பட்டு உடுத்தி, கள்ளழகர் திருக்கோலத்தில் தங்கப் பல்லக்கில் புறப்படுகிறார் சுந்தரராஜ பெருமாள். 18ம் படி கருப்பணசாமியிடம் அனுமதி பெற்று இரவு 7 மணிக்கு மதுரைக்கு புறப்படுகிறார். வழியில் பக்தர்கள் அமைத்திருக்கும் திருக்கண் மண்டகபடிகளில் எழுந்தருளுகிறார்.
மே 9ம் தேதி காலை 6 மணிக்கு மூன்றுமாவடியிலும், 9 மணிக்கு புதுõரிலும்,மாலை 5 மணிக்கு அவுட்போஸ்டிலும் எதிர்சேவை நடக்கிறது. இரவு தல்லாகுளம் பெருமாள் கோயிலில் திருமஞ்சனம் நடக்கிறது. மே 10ம் தேதி அதிகாலை தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளும் கள்ளழகர் காலை 6.15 மணிக்கு மேல் 7 மணிக்குள் லட்சக்கணக்கான பக்தர்களின் ‘கோவிந்தா’ கோஷம் முழங்க வைகை ஆற்றில் இறங்குகிறார். காலை 10 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளும் கள்ளழகருக்கு பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயிலை சென்றடைகிறார். மே 11ம் தேதி காலை 6 மணிக்கு சேஷ வாகனத்தில் புறப்பட்டு தேனுõர் மண்டபம் வரும் கள்ளழகர், பகலில் கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்கிறார். இரவு 8 மணிக்கு ராமராயர் மண்டபம் வந்தடைகிறார். அங்கு இரவு தசாவதாரம் நிகழ்ச்சி நடக்கிறது. மே 12ம் தேதி காலை மோகன அவதாரத்தில் புறப்படும் கள்ளழகர் அனந்தராயர் மண்டபத்தில் ராஜாங்க சேவையும், நள்ளிரவு 2 மணிக்கு மன்னர் சேதுபதி மண்டபத்தில் பூப்பல்லக்கும் நடக்கிறது. அப்பன்திருப்பதி வழியாக மே 14ம் காலை அழகர் மலையை அடைகிறார். ஏற்பாடுகளை தக்கார் வெங்டாஜலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.