Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழநியில் இலவச பஞ்சாமிர்தம் வீரபாண்டி கோயில் சித்திரை திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை மீனாட்சி சித்திரை திருவிழா பதினோராம் நாள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மே
2017
12:05

மதுரை : சித்திரை திருவிழாவின் பதினோராம்நாளில் மீனாட்சியும்,  சுந்தரேஸ்வரரும் தேரில் பவனி வருகின்றனர். ஊர் கூடித்தேர் இழுத்தது போல என்னும் சொல்வர். மக்கள் அனைவரும் ஒன்று கூடி இழுத்தால் தான் தேர் பவனி சிறப்பாக நடக்கும்.  ஒற்றுமையை வலியுறுத்தும் இந்த விழா நம் பண்பாட்டின் அடையாளம். மன்னர் நகர் வலம் வருவது போல, உலகாளும் இறைவனும், இறைவியும் தேரில் பவனி வருகின்றனர். நாயக்கர் காலத்திற்கு முன்பிருந்தே மதுரையில் தேர் பவனி நடந்ததை திருப்பணிமாலை என்னும் நூல் குறிப்பிடுகிறது.

16ம் நூற்றாண்டில் அமைச்சராக இருந்த அரியநாத முதலியார் தேர் மண்டபத்தைக் கட்டினார். சுவாமி, அம்மன் தேர்கள் ராணி மங்கம்மாளின் பேரனான விஜய ரெங்க சொக்கநாத நாயக்கரால் செய்யப்பட்டவை. சிவபுராணம், திருவிளையாடல் சிற்பங்கள்  தேரில் அழகுற செதுக்கப்பட்டுள்ளன. தேரில் பவனியின் போது சுவாமிக்கு ஆபரணம் அணிவிப்பதில்லை. பட்டுத்துண்டால் ஆன பரிவட்டம் மட்டுமே கட்டுவர். தேர்பவனி முடிந்ததும், சுவாமிக்கு
கிரீடம், ஆபரணம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடக்கும். இரவில் சப்தாவர்ண சப்பர பவனி நடக்கும். தாருகாட்சன், கமலாட்சன்,வித்யுன்மாலி ஆகிய மூன்று திரிபுர அசுரர்களும்
ஆணவம் கொண்டு மூவுலகத்தையும் துன்புறுத்தினர். தேர் மீதேறி புறப்பட்ட சிவன், அசுர வதம் நிகழ்த்தி உலகைக் காத்தார். இதை நினைவூட்டும் விதத்திலும் சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் தேரில் பவனி வருகின்றனர்.இன்று அம்மையப்பரை தரிசித்தால் ராஜபோக
வாழ்வு அமையும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: அவிநாசி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், வியாஸராஜர் ராம நாம பஜனை மடத்தில் கம்பராமாயணம் தொடர் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு, 16 கால் மண்டபம் அருகில் கார், வேன், பேருந்து உள்ளிட்ட ... மேலும்
 
temple news
திருப்பூர்: திருப்பூர், ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், ஆண்டு தோறும், வைகுண்ட ஏகாதசி விழா விமரிசையாக ... மேலும்
 
temple news
காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஐயப்பன் கோயில்களில் மண்டல பூஜை நடந்தது.கோபால்பட்டி அருகே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar