பதிவு செய்த நாள்
09
மே
2017
03:05
கிருஷ்ணராயபுரம்: சிந்தலவாடி மகா மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு பூச்சொரித்தல் விழா நடந்தது. கிருஷ்ணராயபுரம் தாலுகா, சிந்தலவாடி மகா மாரியம்மன் கோவில் திருவிழா
முன்னிட்டு, பூச்சொரிதல் விழா நடந்தது. முன்னதாக, அம்மனுக்கு புஷ்பாபிஷேகம் செய்ய, பக்தர்கள் பூத்தட்டுகளில் விதவிதமான பூக்களை கொண்டு வந்தனர். பின், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, லாலாப்பேட்டை பகுதியில் முக்கிய வீதிகள் வழியாக,கோவிலுக்கு கொண்டு சென்று சிறப்பு பூஜைகள் நடத்தினர். விழாவில், லாலாப்பேட்டை, சிந்தலவாடி, மகிளிப்பட்டி, மேல சிந்தலவாடி ஆகிய பகுதி பக்தர்கள் கலந்து கொண்டனர்.
* கரூர், அபயபிரதான ரெங்கநாத சுவாமி கோவிலில், இன்று தேரோட்டம் நடக்கிறது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில், சித்திரை திருவிழா கடந்த, 1ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து நாள்தோறும் சுவாமி திருவீதி உலா நடந்தது. நேற்று முன்தினம் மாலை கோவிலில், திருக்கல்யாணம் நடந்தது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை, 8:00 மணிக்கு நடக்கிறது. நாளை பல்லக்கு மற்றும் தீர்த்தவாரி ஆகியன அமராவதி ஆற்றில்
நடக்கிறது.