Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கூடலூர் மங்கலதேவி கண்ணகி கோயிலில் ... குறுக்குத்துறை முருகன்கோயில்சிவன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவாடானை திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் தேரோட்டம் நடந்தது.
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மே
2017
03:05

திருவாடானை: திருவாடானை அருகே திருவெற்றியூரில் பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் கோயில் உள்ளது. இக் கோயில் சித்திரை திருவிழா ஏப்.29ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை துவங்கியது.

பாகம்பிரியாள் தாயார், வல்மீகநாதருடன் காலை 8:30 மணிக்கு தேரில் எழுந்தருளினார். 9:00 மணிக்கு தேரோட்டம் துவங்கியது.ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். 11 மணிக்கு தேர் கோயில் முன்பு நிறுத்தப்பட்டது. பின்பு மாலை 3:00 மணிக்கு
தேரோட்டம் துவங்கி, 4:00 மணிக்கு தேர்நிலைக்கு சென்றடைந்தது. பின்பு தேர்தடம் பார்க்கும் நிகழ்ச்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை தேவஸ்தான கண்காணிப்பாளர்சரவண கணேசன், கவுரவ கண்காணிப்பாளர் சுந்தர்ராஜன் மற்றும் கிராமத்தினர் செய்திருந்தனர்.

இரவில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. அரசு போக்குவரத்து சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இன்று காலை 11:00 மணிக்கு தீர்த்தவாரி நடைபெறும்.

பரமக்குடி: பரமக்குடியில் சித்திரைத் பிரம்மோற்சவ விழாவையொட்டி ஈஸ்வரன் மற்றும் மீனாட்சி அம்மன் கோயில்களில் சித்திரைத் தேரோட்டம் பக்தர்களின் ஹர ஹர,
சிவ சிவ கோஷம் முழங்க நடந்தது.பரமக்குடி ஈஸ்வரன் மற்றும் மீனாட்சி அம்மன் கோயில்களில் கடந்த பத்து நாட்களாக சித்திரைத் திருவிழா நடந்து வருகிறது. விழாவில் நேற்று முன்தினம் மீனாட்சி சுந்தரேஸ்வரர், விசாலாட்சி சமேத சந்திரசேகரர்திருக்கல்யாணம் நடந்தன.

தொடர்ந்து நேற்று காலை 9:30 மணிக்கு இரண்டு திருக்கோயில்களிலும் விநாயகர், முருகன் தேர்கள் முன் செல்ல சுவாமி பிரியாவிடையுடனும், அம்பாள் தேர் என தனித்தனியாக
வலம் வந்தனர். தேரினை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஹர ஹர, சிவ சிவ கோஷம் முழங்க பக்திப் பரவசத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். தேர் மதியம் 12 மணியளவில் நிலையை அடைந்தது. இன்று கொடியிறக்கத்துடன் விழா நிறைவடையும்.
ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்:  திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் கார்த்திகை அமாவாசை தினமான இன்று(19ம் தேதி) ... மேலும்
 
temple news
கோவை; கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மதுரை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தின் தற்போதைய நிலை குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில், அலர்மேலு மங்கை தாயார் சமேத பிரசன்ன ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் குபேரபட்டிணத்தில் அமைந்துள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar