Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிவபெருமான் வேடமணிந்து வலை வீசிய ... திருப்புல்லாணியில் பட்டாபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னிமலை கோவில்களில் சித்ரா பவுர்ணமி கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மே
2017
03:05

சென்னிமலை: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, சென்னிமலை சுற்றுவட்டார கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. சென்னிமலை அருகே, சொக்கநாதபாளையம் மாரியம்மன் கோவிலில், பக்தர்கள் மடவிளாகம் சென்று தீர்த்தம் எடுத்து வந்தனர். நொய்யல் ஆற்றங்கரையில் இருந்து பக்தர்கள் தீர்த்த குடங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு கோவிலுக்கு வந்தனர். அங்கு அம்மனுக்கு தீர்த்த அபிஷேகம் நடந்தது. இறுதியில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

*எக்கட்டாம்பாளையம் மாரியம்மன் கோவில் மற்றும் மேற்கு புதுப்பாளையம் சோளியம்மன் கோவிலில் இருந்து, பக்தர்கள் கொடுமுடி சென்று காவிரி தீர்த்தம் எடுத்து வந்தனர். இரவு, 7:00 மணிக்கு மாரியம்மனுக்கு சந்தனம் மற்றும் தீர்த்த அபிஷேகம், தீப அலங்கார ஆராதனை நடந்தது. இதேபோல் சென்னிமலை பகுதியில் பல்வேறு கோவில்களில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

*முருங்கத்தொழுவு மணிமலை கருப்பணசுவாமி கோவிலில் அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

*சென்னிமலை முருகன் கோவிலில் சித்திரை பவுர்ணமி கிரிவலம் சிறப்பாக நடந்தது. அதிகாலை, 7:00 மணிக்கு ஊத்துக்குளி சாலை பிரிவில் உள்ள மேற்கு தண்ணீர்பந்தல் பழனிஆண்டவர்க்கு அபிஷேகபூஜை நடந்தது. மலை அடிவாரத்தில் மாலை, 5:20 மணியளவில், முருகனின் சக்திவேலுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. அதனைத் தொடர்ந்து, 5:40 மணியளவில், கிரிவலம் தொடங்கியது. இரவு, 7:00 மணியளவில், கிரிவலப்பாதையில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு முழுவதும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரினனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar