Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அறுவடை திருவிழா! இந்த வாரம் என்ன
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நேர்மையாய் வாழ்வதில் தோல்வியே இல்லையே...!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மே
2017
05:05

* ஒளிவு மறைவு இன்றி செய்ததை செய்ததாகச் சொல்லுங்கள். செய்யாததை செய்யவில்லை என மறுத்து விடுங்கள். நேர்மையாக வாழ்ந்தால் தோல்வியே வருவதில்லை.

* சாத்வீகமாக வாழ்பவனே எல்லா உயிர்களையும் நேசித்து மகிழ்வான். ஏழை எளியவர்களுக்கு உதவி செய்ய ஓடோடி வருவான்.

* செய்த குற்றத்தை மன்னிக்கும் மனம் கொண்டவனாக மனிதன் இருக்க வேண்டும். இந்த குணத்தால் மனத்து?ய்மை ஏற்படும்.

* பிறர் பொருளைக் கண்டு ஆசைப்படுபவன், வாழ்வில் திருப்தி அடைய மாட்டான். நாளடைவில் அவன் இந்த இழிகுணத்தின் பிடியில் சிக்கி எல்லாவற்றையும் இழப்பான்.

* யாரையும் ஏமாற்றக்கூடாது. ஏமாறவோ ஏமாற்றவோ இடம் கொடுத்தால் இருதரப்புக்கும் கஷ்டமே.

* வேடிக்கையாகவோ, கோபமாகவோ, பண ஆசையிலோ, பிறருக்கு பயந்தோ மனிதன் பொய் பேசக் கூடாது. எந்த
சூழலிலும் பொய் பேசாதவனே மக்களில் உயர்ந்தவன்.

* உண்மையே உள்ளத்து?ய்மையை உண்டாக்கும். மனச்சுத்தமே ஒழுக்கத்தின் உயிர்நாடி. அதனால் பொய்யை விலக்கி விட்டு, உண்மையின் பாதையில் செல்லுங்கள்.

* பட்டினி, நோய், கவலையால் வாடுபவர்களுக்கு தேவையான உணவும், மருந்தும் கொடுத்து உதவுங்கள். அவர்களின் மனம் மகிழும் விதத்தில் ஆறுதல் வார்த்தைகளைக் கூறுங்கள்.

* பேராசை படைத்தவனுக்கு இந்த உலகம் முழுவதையும் பரிசளித்தால் கூட திருப்தி உண்டாவதில்லை. இருப்பதைக் கொண்டு
திருப்தியாக இருப்பவன் வாழ்வில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.

* கூட்டு முயற்சியால் கிடைத்த பொருளை கூட்டாளிக்கு பகிர்ந்து அளியுங்கள். சுயநலம் சிறிதுமின்றி பொது நலத்துடன் அனைவரையும் அரவணைத்துச் செல்லுங்கள்.

* தேவைக்கு மேல் கிடைத்த பணத்தை சேமிப்பதை விட, தேவை உள்ளவனுக்கு கொடுப்பது சிறந்தது. பணம் சேரச் சேர மனிதனிடம் ஒழுக்கம், நேர்மை எண்ணம் குறைய ஆரம்பிக்கிறது.

* அறம் சிறந்த மங்கலப்பொருள். கொல்லாமை, ஒழுக்கம் ஆகிய இரண்டும் அறத்தின் அடிப்படை இலக்கணங்கள்.

* வாழ்க்கையை விருப்பம் போல நீட்டிக்க முடியாது. இந்த குறுகிய காலத்தில் உங்களின் முன்னேற்றத்திற்கும், பிறர்
நலனுக்கும் பயன்படுத்த முயலுங்கள்.

* நல்ல நம்பிக்கையின்றி நல்லறிவு உண்டாகாது. நல்லறிவு இல்லாமல் நல்ல ஒழுக்கம் உண்டாகாது. எப்போதும் நல்ல நம்பிக்கை கொண்டவனாக இருங்கள்.

* வேரில் இருந்து அடிமரமும், அதில் இருந்து கிளைகளும் உண்டாவது போல அடக்கத்தில் இருந்து தர்மமும் அதிலிருந்து நற்செயல்களும் உண்டாகின்றன.

* போதும் என்ற மனம் கொண்டவன் மனநிறைவுடன் வாழ்வதோடு, மற்றவர்களையும் நிம்மதியுடன் வாழச் செய்வான்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மிக அழகானது - பழநி பெரிய ஆவுடையார் கோயில்தலை சாய்த்த கோலம் - திருவூறல், தக்கோலம் (வேலூர் மாவட்டம்)சிற்ப ... மேலும்
 
அரிதாக சில கோயில்களில் கால்களை மாற்றி மடக்கி வைத்தும், குத்துக்காலிட்ட நிலையிலும் காட்சி தரும் ... மேலும்
 
வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், ... மேலும்
 
தெட்சிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தெட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் ... மேலும்
 
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar