பதிவு செய்த நாள்
18
மே
2017
12:05
சேலம்: பெருமாள் கோவிலில், 17ம் ஆண்டு வசந்த உற்சவம் நடந்தது. சேலம், அம்மாபேட்டை, சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், 17ம் ஆண்டு வசந்த விழா, கடந்த, 13ல் தொடங்கி, நேற்று வரை நடந்தது. இதையொட்டி, கோவிலில் செயற்கையாக உருவாக்கிய சிறு தெப்பக்குளத்தில், நந்தவனம் போல் அலங்கரித்து, காய்கனிகளை தொங்கவிட்டு, நடுவில் ஊஞ்சல் அமைத்து, அதில் தாயாருடன் பெருமாளை எழுந்தருளச்செய்திருந்தனர். தினமும் மாலை, சவுந்தரவல்லி தாயாருடன், சவுந்தரராஜருக்கு சேர்த்தி திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம் செய்து, ஏராளமான பக்தர்கள், பக்தி பாடல்களை பாடினர். கிருஷ்ணா பிருந்தாவன கோலாட்ட குழுவினர், கோலாட்டம், கோணங்கி ஆட்டம், பரதநாட்டியம் ஆடினர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், கட்டளைதாரர்கள் செய்திருந்தனர். அக்னி நட்சத்திர உக்கிரத்தை குளிர்விக்க சிவாலயங்களில், ’தாரா’ பாத்திர அபிஷேகம் செய்வதுபோல், விஷ்ணு ஆலயங்களில் வசந்த உற்சவம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.