திருநள்ளார் சனிஸ்வர பவான் பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மே 2017 10:05
காரைக்கால்: திருநள்ளார் சனிஸ்வர பவான் கோவில் பிரமோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. காரைக்கால் மாவட்ட திருநள்ளாரில் தர்பாரண்யேஸ்வரர் கோவலில்,சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.
இக்கோவிலில் ஹேவிளம்பி வருஷம் பிரமோற்சவ விழா நேற்று கோடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக 18ம் தேதி விக்னேஸ்வர பூஜை, மகாகணபதி ஹோமம்,20ம் தேதி அங்குரார்பணம் நடந்தது. நேற்று தர்பாரண்யேஸ்வரர்,அம்பாள் மற்றும் சனிஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.அதைத்தொடர்ந்து காலை 9.15 மணிக்கு ரிஷப கொடியேற்றமும்,பஞ்சமர்த்தி வீதி உலா நடந்தது. இன்று 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை விநாயகர் உற்சவமும்,25ம் தேதி முதல் 27ம் தேதி வர சுப்ரமணிய சுவாமி உற்சவமும்,28ம் தேதி முதல் அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கு நடக்கிது.29ம் தேதி செண்பகதியாகராஜர் வசந்த மண்டபம் எழுந்தருதளும்,31ம் தேதி பூத வாகனத்திலும்,வரும் 1ம்தேதி யானை வாகனத்திலும் 2ம் தேதி பஞ்சமூர்த்திகள் தங்கரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலாவும்,4ம் தேதி தேர் திருவிழாவும் நடக்கிறது. 5ம் தேதி சனிஸ்வர பகவான் தங்க காக்கை வாகனத்தில் சுவாமி விதி உலா நடக்கிறது. 6ம் தேதி தெப்ப உற்சவமும்,8ம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பன்னிர்செல்வம் தலைமையிலான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.