Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி கோயிலில் காக்க வைத்ததால் ... மதுரையில் மஞ்சமலை கோயில் காட்டில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயில் அருகே குப்பை தொட்டி துர்நாற்றத்தால் பக்தர்கள் சிரமம்
எழுத்தின் அளவு:
கோயில் அருகே குப்பை தொட்டி துர்நாற்றத்தால் பக்தர்கள் சிரமம்

பதிவு செய்த நாள்

22 மே
2017
12:05

ராஜபாளையம்: தேசியநெடுஞ்சாலையான மதுரை- கொல்லம் ரோடு அருகே ராஜபாளையம் தென்காசி ரோட்டில் கோதண்டராமர் கோயில் பின்புறம் நகராட்சி குப்பை தொட்டிகளை வைத்துள்ளதால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.  இந்த ரோட்டில் கோதண்டராமர்கோயில், சொக்கர்கோயில், மாரியம்மன்கோயில் உட்பட தனியார் திருமண மண்டபங்கள், பொதுசத்திரம்  உள்ளன.  மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்த பகுதியில், கோதண்டராமர்கோயில் பின்புறம்  நகராட்சியினர் மூன்று குப்பை  தொட்டிகளை நிரந்தரமாக வைத்துள்ளனர். இப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பையை, இந்த தொட்டிகளில் போட்டு வாகனம் மூலம்  அகற்றுகின்றனர்.

தள்ளு வண்டிகளையும் நிறுத்தியுள்ளனர். இதில் பெரும்பாலும் பழுதானவைகளாக உள்ளன. கால்நடைகள் குப்பை தொட்டியை கிளறி,  இரை தேடுகின்றன. இவை திடீரென ரோடு கடப்பதால், நெடுஞ்சாலை ரோட்டில் விபத்து அபாயம் உள்ளது.  கோயிலுக்கு செல்லும்  பக்தர்கள் ரோட்டில் கிடக்கும் அசுத்தங்களை மிதித்து செல்லும் நிலை உள்ளது. மேலும் கோதண்டராமர் சுவாமி கோயிலில் பிரகாரம்  சுற்றி வரும் பக்தர்கள்  துர்நாற்றத்தால் சிரமப்படுகின்றனர். மூக்கை பிடித்துக்கொண்டு செல்லும் பரிதாபம் உள்ளது.

பக்தர் ராஜேந்திரன், ராஜபாளையம் நகராட்சி தென்மன்டல அளவில் சுகாதாரத்தில் முதலிடம் பெற்றுள்ளது. ஆனால் கோயில் பின்புறம்,  கோயில் செல்லும் வழியில் குப்பை தொட்டிகளை வைத்துள்ளனர். நிம்மதி தேடி கோதண்ட ராமர்சுவாமி கோயில் வரும் பக்தர்கள்,  உட்கார்ந்து தியானிக்க முடியாத நிலையில், துர்நாற்றம் ஏற்படுகிறது. உட்கார்ந்த சில நிமிடங்களில் எழுந்து செல்கின்றனர். இந்த  கோயில் கும்பாபிேஷகத்திற்கு சில நாட்களே உள்ள நிலையில், குப்பை தொட்டிகளை உடனே இடம்மாற்ற நகராட்சி நிர்வாகம்  நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் வருஷாபிஷேக விழா மஹாசாந்தி ஹோமத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற, 108 திவ்யதேசங்களில், 57 வது திவ்யதேசமாக விளங்கும் காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேக யாகசாலை பூஜை துவங்கியது.பேரூர் பட்டீஸ்வரர் ... மேலும்
 
temple news
சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதிபதி ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ பாரதி தீர்த்த மஹா சன்னிதானம் ஆசியுடன், ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் அடுத்த இளையனார்வேலுாரில் பாலசுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar