பதிவு செய்த நாள்
23
மே
2017
11:05
கொடைக்கானல்: கொடைக்கானல் குறிஞ்சியாண்டவர் கோயில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பழநி தண்டாயுதபாணி கோயிலின் உபகோயில் கொடைக்கானல் குறிஞ்சியாண்டவர் கோயில். இக்கோயில் கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் மே8ல் துவங்கின. தினமும் லட்சுமி ஹோமம், தீபாராதனை, நடந்தன. நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி அதிகாலை 5:00 மணிக்கு நான்காவது கால பூஜை துவங்கியது. பின், பிம்ப சுத்தி, காப்பு கட்டுதல், நாடி சந்தனம், ஸ்பர்குதி, திரவியாகுதி, பூர்ணாகுதி, யாத்ரா தானம் நடந்தது. காலை 9:15 மணிக்கு குறிஞ்சியாண்டவர் விமானம் மற்றும் ராஜகோபுரத்திற்கு சிவாச்சாரியார்கள் அமிர்தலிங்க குருக்கள், செல்வசுப்ரமணியன் ஆகியோர் கோபுர கலசங்களில் புனிதநீரை ஊற்றி அபிஷேகம் செய்தனர்.9:25 மணிக்கு மூலஸ்தான கும்பாபிஷேகம், மஹா தீபாராதனை நடந்தன. மதியம் 12:00 மணிக்கு குறிஞ்சியாண்டவருக்கு அபிஷேகம், அலங்காரம், உபசாரம் நடந்தன. அன்னதானமும் வழங்கப்பட்டது.திரளான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் வழிபட்டனர். ஏற்பாடுகளை பழநி கோயில் இணை ஆணையர் ராஜமாணிக்கம் செய்திருந்தார்.