Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநாங்கூரில் பன்னிரு ரிஷபாரூட ... அங்காளம்மன் கோவில்களில் ஊஞ்சல் உற்சவம் அங்காளம்மன் கோவில்களில் ஊஞ்சல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழமையான பிரித்தியங்கரா தேவி சிலை மீட்பு
எழுத்தின் அளவு:
பழமையான பிரித்தியங்கரா தேவி சிலை மீட்பு

பதிவு செய்த நாள்

27 மே
2017
11:05

சென்னை: சர்வதேச சிலை கடத்தல்காரன் சுபாஷ் சந்திர கபூரால் கடத்தப்பட்டு, ஆஸ்திரேலியாவில் விற்கப்பட்ட, பிரித்தியங்கரா தேவி சிலையை, தமிழக போலீசார் மீட்டு வந்தனர். தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், 2011 அக்., 30ல், ஜெர்மனியில் பதுங்கியிருந்த, சர்வதேச சிலை கடத்தல்காரன் சுபாஷ் சந்திர கபூரை, 86, கைது செய்து, சென்னை அழைத்து வந்தனர். தற்போது, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவனிடம் விசாரணை நடத்தியதில், தன் கூட்டாளிகள் சிலருடன் சேர்ந்து, விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் இருந்து, அர்த்தநாரீஸ்வரர், பிரித்தியங்கரா தேவி உட்பட, ஆறு சிலைகளை, ௨௦௦௨ல் திருடி, வெளிநாடுகளுக்கு கடத்தியது தெரிய வந்தது. ஆனால், சிலைகள் திருடு போனது பற்றி, கோவில் நிர்வாகம், போலீசில் புகார் அளிக்கவில்லை. இதனால், மாநில சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, ஐ.ஜி., - பொன்.மாணிக்கவேல், தானே புகார்தாரராக மாறி, வழக்கு பதிவு செய்து, சிலைகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். அதன் பலனாக, சில மாதங்களுக்கு முன், ஆஸ்திரேலியாவில் இருந்து, அர்த்தநாரீஸ்வரர் சிலை மீட்கப்பட்டது. நேற்று, பிரித்தியங்கரா தேவி சிலையை மீட்டு, போலீசார் சென்னைக்கு கொண்டு வந்தனர்.

இது குறித்து, கூடுதல், டி.ஜி.பி., - பிரதீப் வி பிலிப் மற்றும் ஐ.ஜி., - பொன்.மாணிக்கவேல் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டி:பிரித்தியங்கரா தேவி சிலை, சோழப்பேரரசி சேரன் மாதேவியால் நிறுவப்பட்டது. 1,046 ஆண்டுகள் பழமையான இந்த கற்சிலை, 2,010 கிலோ எடை உடையது; சர்வதேச சந்தையில், இதன் மதிப்பு, 1.46 கோடி ரூபாய். மும்பையில் இருந்து, கடல் மார்க்கமாக அமெரிக்காவுக்கு கடத்தப்பட்டு, பின், ஆஸ்திரேலியாவில் விற்கப்பட்டது. இந்த சிலை தற்போது மீட்கப்பட்டு, தமிழகம் கொண்டு வரப்பட்டுள்ளது. விருத்தாசலம் நீதிமன்றத்தின் ஒப்புதல் பெற்று, கும்பகோணத்தில் உள்ள சிலைகள் காப்பகத்தில் பாதுகாக்கப்படும். மேலும், சிங்கப்பூரில், 18, அமெரிக்காவில், 31, ஆஸ்திரேலியாவில், நான்கு என, 53 சிலைகளை மீட்கவும் முயற்சி எடுத்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உயிர்களின் அறியாமையை போக்குபவரே குரு. அனைத்து கிரகங்களிலும் குருவே சுபமான கிரகமாக ... மேலும்
 
temple news
சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரை பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; மணலூர்பேட்டை கெங்கை அம்மன் கோவில் சாக்கை வார்த்தல் விழா நடந்தது.மணலூர்பேட்டை பஸ் ... மேலும்
 
temple news
கோவில்பாளையம்; கோவில்பாளையம், காலகாலேஸ்வரர் கோவிலில், இன்று (மே 1ம் தேதி) குரு பெயர்ச்சி லட்சார்ச்சனை ... மேலும்
 
temple news
நத்தம், நத்தம் அருகே களத்துப்பட்டி தேவி கருமாரியம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar