பதிவு செய்த நாள்
31
மே
2017
01:05
குளித்தலை: குளித்தலை அடுத்த, ராஜேந்திரம் மலையாள சுவாமி, மதுரைவீரன் சுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு, நேற்று மருதூர், ராஜேந்திரம் பகுதிமக்கள் சார்பில், ராஜேந்திரம் காவிரி ஆற்றில் இருந்து பால்குட, தீர்த்தக்குடம் ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து, சுவாமிக்கு, தண்ணீர், பால் ஊற்றி சிறப்பு அபிஷேகம் நடந்தது. இன்று, சுவாமிக்கு குட்டி காவல் குடித்தல், சுவாமி திருவீதி உலா போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது.