பதிவு செய்த நாள்
23
மார்
2026
06:03
ஆற்பாக்கம்: ஆற்பாக்கம் திருநல்லழகி அம்பாள் சமேத திருவாலீஸ்வரர் கோவில் பங்குனி பிரம்மோத்சவம் கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது.
காஞ்சிபுரம் – உத்திரமேரூர் சாலை, ஆற்பாக்கத்தில் திருநல்லழகி அம்பாள் சமேத திருவாலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் பிரம்மோத்சவம் நடைபெறும். கடைசியாக 2014ல் பிரம்மோத்சவம் நடந்தது. அதன்பின், கொடி மரம் திருப்பணி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பிரம்மோத்சவம் நடைபெறவில்லை. இந்நிலையில், 12 ஆண்டுகளுக்குப்பின் பங்குனி பிரம்மோத்சவம் நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில், இன்று காலை 6:00 மணிக்கு கொடிமரத்திற்கு பல்வேறு பூஜை செய்து கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும், இரவு, சிம்ம வாகன உத்சவமும் நடந்தது. நாளை காலை சூரிய பிரபையும், இரவு சந்திர பிரபை உத்சவமும் நடக்கிறது. இதில், ஐந்தாம் நாள் உத்சவமான வரும் 27ம் தேதி காலை அதிகார நந்தி உத்சவமும், இரவு திருநல்லழகி சமேத திருவாலீஸ்வரர் திருக்கல்யாண உத்சவமும், தொடர்ந்து தங்க ரிஷபத்தில் வீதியுலாவும் நடக்கிறது.ஏழாம் நாள் உத்சவமான வரும் 29ம் தேதி மாலை தேரோட்டம் நடக்கிறது. ஏப்., 3ம் தேதி மாலை உற்சவசாந்தி அபிஷேகத்துடன் பிரம்மோத்சவம் நிறைவு பெறுகிறது.