வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு கீழரதவீதி மாரியம்மன் கோயில் பொங்கல் விழா காப்புக்கட்டுடன் துவங்கியது. முதல்நாள் கரகம் பெரிய ஊரணிக்கரையிலிருந்து கரகம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. பெண்கள் கரகத்திற்கு வரவேற்பு கொடுத்தனர். கரகம் மூலஸ்தானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. 2ம் நாள் பக்தர்களின் பால்குடங்கள் ஊர்வலம் நடந்தது. முத்தாலம்மன் கோயிலில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதி வழியாக சென்று கோயிலை அடைந்தது. அங்கு அம்மனுக்கு பால் அபிேஷகம் செய்யப்பட்டது. பின்னர் கோயில் முன் பெண்கள் பொங்கல் படையல் வைத்து வழிபட்டனர். மாலையில் முளைப்பாரி ஊர்வலம், கரகம் கரைத்தலும் நடந்தது.