பதிவு செய்த நாள்
01
ஜூன்
2017
12:06
கரூர்: கரூர், மாரியம்மன் கோவில் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு, நேற்று மாலை, கம்பம் ஆற்றுக்கு கொண்டு செல்லும் விழா நடந்தது. கரூரில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில், வைகாசி பெருவிழாவை முன்னிட்டு, நேற்று மாலை, 4:30 மணிக்கு, கம்பம் ஆற்றுக்கு கொண்டு செல்லும் நிகழ்ச்சி துவங்கியது. அமராவதி ஆற்றுக்கு நகரின் முக்கிய வீதிகள் வழியாக, கம்பம் ஊர்வலமாக சென்றது. இதில், போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கலெக்டர் (பொ) சூர்யபிரகாஷ், எஸ்.பி., ராஜசேகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
* கம்பம் ஊர்வலம் புறப்படும் முன், மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட வி.ஐ.பி.,க்கள் கோவிலுக்குள் இருந்தனர். அப்போது, எஸ்.பி.,யுடன் வந்த போலீசார், காலில் பூட்ஸ் அணிந்த நிலையில், மூலவரை மறைத்தபடி நின்றனர். இதனால், பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.