Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அஷ்டபுஜ பெருமாள் குளம் சீரமைப்பில் ... திருத்தணி சுப்ரமணியர் கோவில் கும்பாபிஷேகம் திருத்தணி சுப்ரமணியர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் நிர்வாகிகள் கோஷ்டி பூசல்: பெருமாள் பிரம்மோற்சவம் நிறுத்தம்
எழுத்தின் அளவு:
கோவில் நிர்வாகிகள் கோஷ்டி பூசல்: பெருமாள் பிரம்மோற்சவம் நிறுத்தம்

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2017
12:06

திருக்கண்ணபுரம், சவுரிராஜ பெருமாள் கோவிலில், நிர்வாகிகளிடையே  ஏற்பட்ட கோஷ்டி பூசலால், காலம் காலமாக நடத்தப்பட்ட பிரம்மோற்சவம் நிறுத்தப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டம், திருக்கண்ணபுரம் என்ற ஊரில், சவுரிராஜப் பெருமாள் கோவில் உள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோவில், 1,000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. அங்கு, மூலவர் நீலமேகப் பெருமாளாக அருள் பாலிக்கிறார்.

உற்சவர் சவுரிராஜப் பெருமாள், அமாவாசையன்று வீதி உலா செல்லும் போது, திருமுடி தரிசனம் கிடைக்கும். நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார், குலசேகராழ்வார் ஆகியோரால், மங்களா சாசனம் செய்யப்பட்ட தலம்.  இக்கோவிலில், தொன்று தொட்டு நடத்தப்படும் வைகாசி பிரம்மோற்சவம், நேற்று துவக்கப்பட்டிருக்க வேண்டும்; ஆனால், நடக்கவில்லை. இதனால், பக்தர்களும், ஊர் மக்களும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து, பக்தர்கள் கூறியதாவது: கோவில் வளாகத்தில், அறநிலையத்துறை வைத்த அறிவிப்பு பலகையில், ‘புனரமைப்பு பணிகளுக்காக, பாலாலயம் செய்யப்பட உள்ளதால், வைகாசி பிரம்மோற்சவம் நிறுத்தப்படுகிறது’ என, தெரிவிக்கப்பட்டது. அறநிலையத்துறை கமிஷனருக்கு, கடிதம் எழுதிய போது, கோவிலில் பாலாலயம் செய்ய, அனுமதி அளிக்கப்படவில்லை என, தெரிய வந்தது.  இந்நிலையில், கோவி லின் செயல் அலுவலருக்கு, நீண்ட நாள் விடுப்பு அளிக்கப்பட்டு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்; புதிய செயல் அலுவலர் நியமிக்கப்பட்டார். நேற்று முன்தினம், இணை கமிஷனர் தலைமையில், 21 செயல் அலுவலர்களுடன் பேச்சு நடத்தப்பட்டது. பின், கால அவகாசம் இல்லாததால், பிரம்மோற்சவம் நடத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாக, அவர்கள் தெரிவித்தனர். தொன்று தொட்டு நடந்து வரும் பிரம்மோற்சவத்தை நடத்தி விட்டு, பாலாலயம் குறித்து, முடிவு செய்திருக்கலாம். இவ்வாறு பக்தர்கள் கூறினர்.  அறநிலையத்துறை  அதிகாரிகள் கூறுகையில், ‘பிரம்மோற்சவம் நடத்த, அறநிலையத்துறை தயாராகவே இருந்தது. கோவில் நிர்வாகிகள், இரண்டு தரப்பாக செயல்படுகின்றனர். அவர்களால் தான் இப்பிரச்னை ஏற்பட்டுள்ளது’ என்றனர்.

– நமது சிறப்பு நிருபர் –

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்:  திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் கார்த்திகை அமாவாசை தினமான இன்று(19ம் தேதி) ... மேலும்
 
temple news
கோவை; கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மதுரை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தின் தற்போதைய நிலை குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில், அலர்மேலு மங்கை தாயார் சமேத பிரசன்ன ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் குபேரபட்டிணத்தில் அமைந்துள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar